- Advertisement -
Homeவிளையாட்டு3 சிஎஸ்கே வீரர்கள்: ஐபிஎல்-ல் சிஎஸ்கே-விற்காக சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த...

3 சிஎஸ்கே வீரர்கள்: ஐபிஎல்-ல் சிஎஸ்கே-விற்காக சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த 3 வீரர்கள்

- Advertisement-

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த அணியாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 16 ஐபிஎல் தொடர்களில் 14 சீசன்களில் பங்கேற்றுள்ள சென்னை அணியானது ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்தது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரை கைப்பற்றியதின் மூலம் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அதோடு இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் பட்டத்தையும் கைப்பற்றியுள்ளது.

இப்படி சென்னை அணியின் இந்த வெற்றி பயணத்துக்கு அந்த அணியின் கேப்டன் தோனியின் கேப்டன்சி மிக்க முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு தனது கேப்டன்சியின் மூலம் சென்னை அணியின் வீரர்களை அவர் அழகாக வழி நடத்தி வருகிறார். இந்நிலையில் சிஎஸ்கே அணியில் வாய்ப்பு பெரும் முன்னர் தங்களது கரியரில் மோசமான கட்டத்தை சந்தித்த வீரர்களை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற அணியாகவும் சென்னை அணி திகழ்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான மூன்று பேர் இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கம்பேக் கொடுத்த தருணங்களை தற்போது இந்த பதிவில் காணலாம்.

1) அஜின்க்யா ரஹானே : கடந்த ஆண்டு சென்னை அணி மினி ஏலத்தில் ரகானேவை தேர்வு செய்த போது அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த தேர்வை பார்த்தார்கள். ஏனெனில் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் அவர் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இதன் காரணமாக வெளியேற்றப்பட்ட அவரை சென்னை அணி குறைவான தொகைக்கு ஏலத்தில் எடுத்தது.

- Advertisement-

ஆனால் இப்படி தனக்கு சென்னை அணி கொடுத்த வாய்ப்பு மிகச் சிறப்பாக பயன்படுத்திய ரகானே, நடைபெற்று முடிந்த இந்த ஐபிஎல் தொடரில் 172 என்கிற பிரம்மாண்டமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் 14 போட்டிகளில் விளையாடி 326 ரன்கள் குவித்து சென்னை அணி வெற்றி பெற கை கொடுத்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் தான் இழந்த இடத்தை தற்போது மீட்டெடுத்துள்ளார். அதன்படி தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடி வரும் அவர் 89 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

2) ஆஷிஷ் நெஹ்ரா : 2011-ஆண்டு வாக்கில் இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்ட நெஹ்ரா அதன்பிறகு இந்திய அணியில் இடம் பிடிக்க எவ்வளவோ போராடினார். ஆனாலும் 2014-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாடிய அவர் 20 போட்டிகளில் 30 விக்கெட் கைப்பற்றியதால் மீண்டும் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கம்பேக் கொடுத்து 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பங்கேற்று விளையாடினார். அதன்பிறகு 2017-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு போட்டியுடன் பிரியாவிடை பெற்றார்.

இதையும் படிக்கலாமே: டிராவிட் இதுக்கு சுத்தமா லாயக்கில்ல. இது என்ன ஐபிஎல்-னு நெனச்சிட்டிங்களா? மொத்தமே மூணு பேர் தான் பிட் – கடுமையாக விமர்சித்த முன்னாள் பாக் வீரர்.

3) அம்பதி ராயுடு : 2016 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வந்த அவர் 2017 ஆம் ஆண்டு ஒரு வாய்ப்பு கூட கொடுக்கப்படாமல் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு மும்பை அணியிலிருந்து 2018-ஆம் ஆண்டு சென்னை அணிக்கு இடம் மாறிய ராயுடு அந்த தொடரில் 602 ரன்கள் குவித்து அசத்தினார். அதன் காரணமாக அவருக்கு மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் அந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் போது ஒரு சதம் மற்றும் ஒரு 90 ரன்கள் என அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்