- Advertisement 3-
Homeவிளையாட்டு7 ஓவரில் திரும்ப திரும்ப நடந்த ஒரே விஷயம்.. அஸ்வின், குல்தீப் பந்து வீச்சில் நடந்த...

7 ஓவரில் திரும்ப திரும்ப நடந்த ஒரே விஷயம்.. அஸ்வின், குல்தீப் பந்து வீச்சில் நடந்த அற்புதம்..

- Advertisement 1-

நான்காவது டெஸ்ட்டின் மூன்றாவது நாள் முடிவிலேயே இந்திய அணி சற்று முன்னிலை வகித்து வருவதால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று தான் அனைவருமே கருதி வருகின்றனர். முன்னதாக கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 150 க்கும் மேற்பட்ட இலக்கை இதுவரை 4 வது இன்னிங்சில் எட்டிப் பிடித்ததே கிடையாது.

அப்படி இருக்கும் நிலையில் 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிவரும் இந்திய அணி தற்போது விக்கெட்டை இழக்காமல் 40 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் என 2 தொடக்க வீரர்களும் நல்ல ஃபார்மில் இருப்பதால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரிகிறது.

ஆனாலும் ஒருவேளை இங்கிலாந்து அணியின் சுழல் தாக்குதல் எடுபடும் பட்சத்தில் இந்திய அணிக்கு நெருக்கடி உருவாகவும் வாய்ப்புள்ளது. மிக முக்கியமான நான்காவது நாளில் இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால் ரசிகர்களும் மிகுந்த பரபரப்புடன் இந்த போட்டியை பார்க்கவும் வாய்ப்பு உள்ளது.

அது மட்டுமில்லாமல் இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் தொடரை கைப்பற்றி அசத்தவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் நடந்த சம்பவம் தொடர்பான செய்தி ஒன்று தற்போது ரசிகர் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறது.

- Advertisement 2-

முதல் இன்னிங்சில் அதிக வலுவுடன் இருந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சில் சிக்கி விக்கெட்டுகளை இழந்திருந்தது. சாக் கிரவுலி தவிர எந்த ஒரு இங்கிலாந்து வீரர்களும் சிறப்பாக ஆடாத காரணத்தினால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 145 ரன்களில் ஆல் அவுட்டானது.

அப்படி அவர்கள் பேட்டிங் செய்த இரண்டாவது இன்னிங்சில் தான் சற்று வியப்பான ஒரு விஷயம் நடந்துள்ளது என்றே சொல்லலாம். அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து 44 முதல் 50 ஓவர்கள் என 7 ஓவர்களை மாறி மாறி வீசி இருந்தனர். இந்த ஏழு ஓவர்களிலுமே நான்காவது பந்தில் மட்டும் ஒரு ரன் சேர்க்கப்பட்டது. மற்ற அனைத்து பந்துகளுமே டாட் பாலாக இருந்தது. இப்படி தொடர்ந்து ஏழு ஓவர்கள் நடந்த விஷயம் தான் தற்போது பலரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.

சற்று முன்