மகேந்திர சிங் தோனி மற்றும் தமிழ் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் தமிழ்நாட்டில் அதிக அளவு ரசிகர்களால் விரும்பப்படும் நபர்களாக இருந்து வருகின்றனர். இருவருமே வெவ்வேறு தொழில்களை சார்ந்தவர்கள் என்றாலும் தமிழகம் முழுவதுமே அவர்களுக்கு அர்ப்பணிப்புள்ள ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த இருவருக்கும் இடையிலான ஒரு தொடர்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவு கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யாவின் குழந்தைகள் தோனியுடன் உரையாடிய ஒரு சந்திப்பின்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூர்யாவின் குழந்தைகளிடம் “உங்களது தந்தையின் மிகப்பெரிய ரசிகர் நான்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு தனது வாழ்க்கை வரலாற்று படமான “தோனி தி அன் டோல்டு ஸ்டோரி” என்கிற படத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னைக்கு வந்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் : இரண்டு குழந்தைகளை தோனியுடன் உரையாட மேடைக்கு அழைத்த போது அனைவருக்குமே ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அவர்கள் இருவருமே சூர்யாவின் குழந்தைகளான தியா மற்றும் தேவ் என்பது தான் ரசிகர்கள் வியப்படைய காரணம். பின்னர் அந்த தொகுப்பாளர் தோனியிடம் இவர்கள் இருவரும் நடிகர் சூர்யாவின் குழந்தைகள் என்று தெரிவித்தார்.
இதனை அறிந்த தோனி இரண்டு குழந்தைகளிடமும் உங்களது தந்தையின் மிகப்பெரிய ரசிகர் நான் என்று தெரிவித்தார். மேலும் வாரணம் ஆயிரம் படத்திலிருந்து எப்படி சூர்யாவின் ரசிகராக மாறினேன் என்பது குறித்தும் சில பின்னணிகளை அவர் கூறினார். அதோடு சிங்கம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சூர்யாவின் நடிப்பை ரசித்ததாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
அதோடு தமிழிலும் அந்த படம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டதால் தமிழ் பதிப்பிலும் அந்த படத்தை முழுமையாக பார்த்ததாக தோனி தெரிவித்து இருந்தார். இந்த நிகழ்ச்சியின் போது சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் கலந்து கொண்டிருந்தார். இந்த உரையாடலின் போது சூர்யாவின் மகள் தியா தோனியிடம் கேள்வி ஒன்றினை எழுப்பினார்.
அதாவது பள்ளி நாட்களில் நீங்கள் குறும்புக்காரரா? என்று தோனியை பார்த்து கேட்டார். அதற்கு பதில் அளித்த தோனி: எல்லோருமே குழந்தையாக இருக்கும்போது குறும்பாக தான் இருப்போம் என்று நான் நினைக்கிறன். ஆனால் எவ்வளவு குறும்பாக இருந்தாலும் சில விடயங்களை நாம் செய்யலாம், சில விடயங்களை செய்யக்கூடாது. நான் குறும்பாக இருந்தாலும், செய்யக்கூடாத செயல்களை செய்தது கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியல்கள் கூறியதை நான் கேட்டு நடந்தேன். பிள்ளைகளாகிய நீங்கள் இந்த வயதில் தான் குறும்பு செய்யமுடியும். ஆனால் பெற்றோர் மற்றும் ஆசிரியல்கள் கூறுவதையும் கேட்டு நடக்க வேண்டும் என்று கூறினார் தோனி. இப்படி தோனி சூர்யாவின் குழந்தைகளுடன் உரையாடும் இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.