- Advertisement -
Homeவிளையாட்டுஎனக்கு வாய்ப்பு கிடைத்தால் இதை செய்வதாக சிஎஸ்கே கூறியது. எல்லா புகழும் மஹி பாய்க்கே -...

எனக்கு வாய்ப்பு கிடைத்தால் இதை செய்வதாக சிஎஸ்கே கூறியது. எல்லா புகழும் மஹி பாய்க்கே – அஜிங்யே ரஹானே பேச்சு

- Advertisement-

ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று மீண்டும் தங்களை ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த அணிகளில் ஒன்று என காட்டியுள்ளது சிஎஸ்கே. இந்த சீசன் முழுவதும் பேட்டிங், பௌலிங், பீல்டிங் மற்றும் கேப்டன்சி என அனைத்து துறைகளிலும் கலக்கிய சிஎஸ்கே அணிக்கு இந்த கோப்பை அவர்களின் கிரீடத்தில் மற்றொரு சிறகாக அமைந்துள்ளது.

சிஎஸ்கே அணி இத்தகைய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் அந்த அணியில் இருப்பவர்கள் பலரும் ஸ்டார் பிளேயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அணி வீரர்கள் பலரும் மிகக் குறைவான தொகைக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸும் 2 போட்டிகள் மட்டுமே விளையாடினார்.

மற்றொரு பக்கம் மற்ற அணிகளால் வேண்டாம் என ஒதுக்கப்பட்ட வீரர்களை அணியில் எடுத்து அவர்களை சிறப்பாக செயல்பட வைத்ததும் தோனி மற்றும் சிஎஸ்கேவின் சிறப்பாகும். டெஸ்ட் போட்டிகளில் கைவிடப்பட்டு, ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளால் ஏலத்தில் கேட்கப்படாத அஜிங்யே ரஹானேவை அடிப்படைத் தொகைக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டு வந்தது.

இந்த தொடரில் தன்னுடைய வித்தியாசமான அதிரடி முகத்தைக் காட்டி அனைவரையும் வியக்க வைத்தார் ரஹானே. நேற்றைய போட்டியில் முக்கியமான கட்டத்தில் 2 பவுண்டர்களிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி 13 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார் ரஹானே. அவரின் இன்னிங்ஸும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.

- Advertisement-

போட்டி முடிந்ததும் பேசிய ரஹானே “இந்த சீசனை மிகவும் ரசித்தேன். அதற்கான பெருமை முழுவதும் CSK நிர்வாகத்திற்கும் மஹி பாய்க்கும் செல்கிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் என்னை முழுமையாக ஆதரிப்பதாகக் கூறினர், மேலும் இந்த சீசனுக்கு முன்பு அணியில் எனது பங்கு என்ன என்று என்னிடம் தெளிவாக சொன்னார்கள். என் பேட்டிங்கில் அதன் பின்னர் அவர்கள் தலையிடவே இல்லை, சிஎஸ்கே கொடுக்கும் சுதந்திரம் மிகப்பெரியது.

நான் பேட்டிங் செய்த விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது உண்மையிலேயே சிறப்பான ஒன்று. மிகவும் தீவிரமான சிறப்பான பங்களிப்பை கோரும் அணி இது.  இன்று நாங்கள் விளையாடிய ஆட்டம் உண்மையிலேயே சிறப்பானது. ஒட்டுமொத்தமாக மிக்க மகிழ்ச்சி. ஜடேஜாவின் இன்னிங்ஸ் தனித்துவமானது” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே: கடைசி ஓவர் ஆடும்போது இதை எல்லாம் தான் நான் யோசித்தேன். இந்த வெற்றியை நான் ஸ்பெஷல் நபருக்கு டெடிகேட் பண்றன் – ஜடேஜா பேச்சு

அஜிங்யே ரஹானே ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவர் இங்கிலாந்தில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்குள் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்