- Advertisement -
Homeவிளையாட்டுரோஹித் சர்மாவுக்கு மாற்று இவரா? மொதல்ல அவர் பர்மனென்ட் ஆகட்டும்... அதுக்கப்புறம் மத்தத பாக்கலாம் -...

ரோஹித் சர்மாவுக்கு மாற்று இவரா? மொதல்ல அவர் பர்மனென்ட் ஆகட்டும்… அதுக்கப்புறம் மத்தத பாக்கலாம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

- Advertisement-

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வரும் ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி நிறைய விமர்சனங்களை அனுப்பியது. குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் அதை சரியாக பயன்படுத்தாத கேப்டன் ரோஹித் சர்மா தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அஸ்வினை தேர்ந்தெடுக்காமல் சுமாராக கேப்டன்ஷிப் செய்தது தோல்விக்கு முக்கிய காரணமானது. மேலும் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றிருந்தாலும் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த அவர் தற்போது இந்த ஃபைனலிலும் வெற்றியை பதிவு செய்யவில்லை.

அதனால் 36 வயதை கடந்த அவருக்கு பதிலாக வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு புதிய கேப்டன் அறிவிக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் அதற்கு செவி சாய்க்காத தேர்வுக்குழு மீண்டும் ரோகித் சர்மாவையே கேப்டனாக அறிவித்துள்ளது நிறைய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிக்காகவும் உள்ளூர் தொடரில் ரஞ்சி கோப்பையில் மாநில அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்ட அனுபவம் கொண்ட இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வருங்காலங்களில் இந்தியாவை வழி நடத்துவதற்கு தகுதியானவர் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.

ஆகாஷ் சோப்ரா மறுப்பு:
கடந்த 2021இல் நியூசிலாந்துக்கு எதிராக சதமடித்து அசத்திய அவர் பெரிய அளவில் விளையாடுவதற்கு முன்பாகவே காயத்தை சந்தித்து 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்கவில்லை. இருப்பினும் இளம் வீரராக இருப்பதால் இந்தியாவை வழி நடத்துவதற்கு அவர் சரியானவராக இருப்பார் என்று ரசிகர்கள் சொன்னாலும் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்பும் அளவுக்கு தரமாக இல்லை என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“ஸ்ரேயாஸ் தம்முடைய அறிமுக போட்டியிலேயே சதமடித்த நல்ல வீரர் என்றாலும் இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது. குறிப்பாக சுழல் பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் திறமையை கடந்த டிசம்பரில் நடைபெற்ற வங்கதேச தொடரில் அவர் வெளிப்படுத்தினார். ஆனால் அவர் இன்னும் ஷார்ட் பிட்ச் மற்றும் ஸ்விங் ஆகி வரும் வேகப்பந்துகளுக்கு எதிராக நிறைய முன்னேற வேண்டும்”

- Advertisement-

“எனவே அந்த நுணுக்கங்களில் முன்னேற்றத்தை காணும் வரை அவருடைய டெஸ்ட் கேரியர் மலர்ந்து சிறப்பாக அமையும் என்று சொல்ல முடியாது. அப்படி இதுவரை விளையாடும் 11 பேர் அணியிலேயே நிலையான இடத்தை பிடிக்காத அவர் இந்திய அணியில் நிரந்தரமாகி விட்டார் என்றும் இப்போதே சொல்ல முடியாது” என்று கூறினார்.

அவர் கூறுவது போல தரமான சுழல் பந்து வீச்சுக்கு எதிராக அட்டகாசமாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் சமீபத்திய தொடர்களில் ஷார்ட் பிட்ச் பந்துகளில் வலையில் சிக்கி எலியை போல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். எனவே அந்த பலவீனத்தை சரி செய்து ஓரிரு வருடங்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கேப்டனாகும் தகுதியை அவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்