- Advertisement 3-
Homeவிளையாட்டுவன்மத்தை கக்கிட்டாரோ.. கோலிய சீண்டுவதற்காக ரோஹித்தை பற்றி ராயுடு சொன்ன விஷயம்..

வன்மத்தை கக்கிட்டாரோ.. கோலிய சீண்டுவதற்காக ரோஹித்தை பற்றி ராயுடு சொன்ன விஷயம்..

- Advertisement 1-

கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் குறித்த கருத்துக்கள் பெரிய அளவில் பரவலாக இருந்த நிலையில் இனி அடுத்த ஒரு மாத காலத்திற்கு டி20 உலக கோப்பையை பற்றிய செய்திகள் தான் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திழுக்கும் என்றும் தெரிகிறது. இந்த முறை பல கிரிக்கெட் பிரபலங்களும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என தங்களின் ஆருடங்களை தெரிவித்து வரும் நிலையில் ரசிகர்கள் பலரின் நம்பிக்கையாகவும் அந்த விஷயம் தான் உள்ளது.

ஏ குரூப்பில் இடம் பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து, பாகிஸ்தான், USA மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு எதிராக தங்களின் லீக் போட்டிகளை ஆட உள்ளது. இதில் பாகிஸ்தானின் தவிர மற்ற அனைத்து அணிகளும் சிறிய அணிகளாக இருப்பதால் இந்தியாவுக்கு லீக் போட்டிகள் பெரிய அளவில் தடைக்கல்லாக இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இதனை தொடர்ந்து நடைபெறும் போட்டிகளில் நிச்சயம் இந்திய அணி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் முன்னேற வாய்ப்புள்ளதால் கவனமாக ஆடி டி 20 உலக கோப்பையை 17 ஆண்டுகள் கழித்து சொந்தமாக வேண்டும் என்பதும் இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதேவேளையில் இந்த சீசனில் எந்தெந்த அணிகள் அரை இறுதிப் போட்டி சுற்றுக்கு முன்னேறும் என்பது பற்றியும், யார் இந்த சீசனில் அதிக ரன்களை எடுப்பார்கள் என்பது பற்றியும், யார் அதிக விக்கெட்டுகள் எடுப்பார் என்பது பற்றியும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களையும், விருப்பங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement 2-

அந்த வகையில் பலரின் அரை இறுதி அணியில் இந்தியாவும் இடம் பிடித்துள்ள நிலையில், விராட் கோலி இந்த டி 20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடிப்பார் என முகமது கைஃப், ஸ்ரீஷாந்த், மேத்யூ ஹைடன் உள்ளிட்ட பலரும் கணித்துள்ளனர்.

அப்படி இருக்கையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சொன்ன கருத்து தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணிக்கு எதிராக பல சீசன்கள் ஆடி இருந்த ராயுடு, சமீபத்தில் சிஎஸ்கே அணி ஆர்சிபிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறும் போது கண்ணீர் விட்டிருந்தார்.

தொடர்ந்து ஆர்சிபி அணி, பிளே ஆப் போட்டியில் தோற்றதும் அந்த அணி நிர்வாகத்தையும், கோலியையும் சேர்த்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அப்படி இருக்கையில், மீண்டும் ஒருமுறை கோலி ரசிகர்களை சீண்டி பார்த்துள்ளார் ராயுடு. பல பிரபலங்களும் இந்த சீசனில் கோலி, பாபர் அசாம், ஜோஸ் பட்லர் உள்ளிட்டோர் அதிக ரன்களை எடுப்பார்கள் என தெரிவித்து வந்த நிலையில் ராயுடு மட்டும் உலக கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தான் அதிக ரன்களை எடுப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

ஐபிஎல் உள்ளிட்ட சமீபத்திய டி 20 போட்டிகளில் தனது பேட்டிங்கால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்கும் ரோஹித் ஷர்மாவை சம்பந்தமே இல்லாமல் ராயுடு தெரிவித்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. மேலும் விராட் கோலியை சீண்டுவதற்காக தான் ராயுடு இப்படி குறிப்பிட்டார் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்