- Advertisement -
Homeவிளையாட்டுதோனிகிட்ட நான் பாத்தத இப்போ இங்கிலாந்து டீம் கிட்ட பாக்குறேன். ஆஷஸ் முதல் போட்டி குறித்து...

தோனிகிட்ட நான் பாத்தத இப்போ இங்கிலாந்து டீம் கிட்ட பாக்குறேன். ஆஷஸ் முதல் போட்டி குறித்து – ஏ.பி.டி கருத்து

- Advertisement-

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நடப்பு ஆஷஸ் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு இருக்கும் வேளையில், 7 விக்கெட்டை கைற்றினால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்ற சுவாரசியமான நிலை இருப்பதால் போட்டியின் ஐந்தாவது நாள் ரசிகர்கள் மத்தியில் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியை ஏற்றதில் இருந்து அந்த அணி “பேஸ்பால்” என்கிற முறைப்படி அதிரடியாக விளையாடி வருகிறது.அதன்படி இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் நாளிலேயே 393 ரன்கள் எடுத்திருந்த வேளையில் அந்த அணி டிக்ளர் செய்து அதிரடி காட்டியிருந்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது. அதேவேளையில் ஆஸ்திரேலியா அணி அடுத்து இரண்டு நாட்கள் சுதாரித்து 386 ரன்கள் குவிக்க முதல் இன்னிங்சில் எப்படியோ ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை கிட்டத்தட்ட சமன் செய்தது.

அதன் பிறகு தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணியானது 287 ரன்களை குவிக்க தற்போது கடைசி நாள் ஆட்டத்தில் எந்த அணி வெற்றி பெறும்? என்கிற பரபரப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து அணி விளையாடி வரும் இந்த “பேஸ்பால்” அப்ரோச் தோனியின் கேப்டன்சியை போன்று இருப்பதாக அதனை ஒப்பிட்டு தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில் : இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நான் பர்மிங்காமின் வானிலையை பார்த்ததில்லை. இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வரும் விதம் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அதனை நீங்கள் பேஸ்பால் என்று அழைக்கிறீர்கள். ஆனால் நான் இதனை ஸ்மார்ட் கிரிக்கெட் என்று நினைக்கிறேன்.

ஏனெனில் சிறந்த அணிகள் சூழ்நிலைகளை தங்களுக்கு சாதகமாக மாற்றியமைத்து விளையாட தயாராக இருக்கும். அப்படி சூழ்நிலையை நமக்கானதாக மாற்றினால் மற்ற அணிகளை விட நமது அணி முன்னிலை பெறும். அப்போதுதான் தைரியமான முடிவுகளையும் எடுக்க முடியும். இது தனி நபரிடம் இருந்து வராது ஒரு அணியாக சிறப்பாக விளையாட வேண்டும். அப்போதுதான் அந்த நடைமுறை வழக்கத்திற்கு ஒத்துவரும்.

தற்போது இங்கிலாந்து அணி அதே போன்ற ஒரு அதிரடியான அணுகுமுறையை கையில் எடுத்து விளையாடி வருகிறது. அதனால் அவர்கள் சிறந்த அணியாக திகழ்கிறார்கள். இதேபோன்று ஐபிஎல் தொடரிலும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக பாசிட்டிவான அணுகுமுறையை கொண்டுள்ளது என டிவிலியர்ஸ் இங்கிலாந்து அணியை தோனி தலைமையிலான சென்னை அணியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement-

சற்று முன்