- Advertisement -
Homeவிளையாட்டுதோனிக்கு இந்த சாப்பாடெல்லாம் ஒத்துக்காது. தோனி என்னிடம் விரும்பி சாப்பிட கேட்டது இது தான். ...

தோனிக்கு இந்த சாப்பாடெல்லாம் ஒத்துக்காது. தோனி என்னிடம் விரும்பி சாப்பிட கேட்டது இது தான். தோனிக்கு உணவளித்தது குறித்து ரகசியம் பகிர்ந்த செப்

- Advertisement-

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி களத்துக்குள் எப்படி அனைவரையும் கவரும் படி செயல்படுவாரோ, அதுபோலவே களத்துக்கு வெளியேயும் அவரின் பண்பான செயல்கள் அவரோடு பழகுபவர்களை வியக்கவைக்கும். சாதாரண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை தோனியோடு தங்களது இனிமையான அனுபவங்களை பொதுவெளியில் பலமுறை பகிர்ந்து சிலாகித்துள்ளனர்.

அந்த வகையில் இப்போது கேரளாவை சேர்ந்த பிரபல சமையல் கலை நிபுணரான சுரேஷ் பிள்ளை தோனி பற்றி இனிமையான சம்பவம் ஒன்றை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் “இன்று உலகமே அந்த லெஜண்ட்டை கொண்டாடி வருகிறது. ஆனால் நான் அவரோடு எனக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு அற்புத தருணத்தையே இப்போதும் நினைத்துக் கொள்கிறேன்.

அக்டோபர் 31, 2018 இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் விளையாடியது. அதற்காக அணியினர் கோவளத்தில் உள்ள லீலா ஹோட்டலில் தங்கி இருந்தனர். அப்போது நான் அங்கு செஃப் ஆக வேலை பார்த்தேன். பஸ்ஸில் இருந்து வீரர்கள் இறங்கிய தருணத்தில் இருந்து எனது கண்கள் ஒருவரை மட்டுமே தேடிக் கொண்டிருந்தன. அவர் தன்னுடைய அறைக்கு செல்லும் வழியில் தன்னுடைய டிரேட்மார்க் புன்னகையோடு எங்களுக்கு வணக்கம் கூறினார். ஒரு குழந்தை தனக்கு பிடித்த ஒரு சிலையை பார்த்தல் எப்படி கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருக்குமோ அதுபோல நான் அவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சிறிது நேர ஓய்விற்கு பிறகு, 7 மணி வாக்கில் வீரர்கள் அனைவரும் தங்கள் இரவு நேர உணவை ஆர்டர் செய்ய துவங்கினர். அவர்களில் பெரும்பாலும் கடல் சார்ந்த உணவையே (சீ புட்) விரும்பி கேட்டனர். 9.30 மணி வாக்கில் பெரும்பாலானவர்கள் இரவு உணவை முடித்தனர். ஆனால் 10 மணிக்கு தான் நான் எதிர்பார்த்தவரிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது.

- Advertisement-

நான் என் வேலையை எல்லாம் அப்படியே போட்டுவிட்டு, என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவர் அறைக்கு சென்றேன். அவர் என்னிடம் “ஹாய், எப்படி இருக்கிறீர்கள்? இங்கு என்ன வகையான உணவுகள் உள்ளன?’ என ஹிந்தி மற்றும் தமிழ் மொழி கலந்து கேட்டார். நான் எங்களிடம் இருந்த கடல் உணவு பட்டியலை சொல்ல, அவர் “எனக்கு கடல் உணவு அலர்ஜி. சிக்கன் மற்றும் சாதம் கிடைக்குமா? அதோடு பூண்டு ரசமும் தாருங்கள் எனக்கு தொண்டை சரி இல்லை என்றார்.

நான் ஒரு 20 நிமிடங்கள் கழித்து செட்டிநாடு சிக்கன், பாஸ்மதி அரிசி சாதம், ரசம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ரூம் நம்பர் 302க்கு(டோனியின் அறை என்) சென்று அவரிடம் கொடுத்தேன். அடுத்த நாள் காலையில் ஜிம் செல்லும் வழியில் தோனி என்னை சந்தித்து ‘இரவு உணவு நன்றாக இருந்ததாக பாராட்டினார். அவரின் அந்த செயல் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. அந்த உணர்வுக்கு இணையானது எதுவும் இல்லை.

இதையும் படிக்கலாமே: இந்த டெஸ்ட் போட்டியில கோலியோட ஆட்டம் அவ்ளோ சூப்பராலாம் இருக்கப்போறதில்ல – போட்டிக்கு முன்பு வாய்பேசும் மார்னஸ் லபுஷேன்

எனக்கு மிகவும் பிடித்தமான நபர்களில் ஒருவருக்கு நான் நான்கு நாட்கள் அவருக்கு பிடித்த மாதிரி சமைத்துக் கொடுத்தேன் என்பது எனது தொழில் வாழ்க்கையின் சிறந்த தருணங்களில் ஒன்று. எப்போதாவது யாராவது ஒருவர் வந்து நம் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவார். எனக்கு அப்படிப்பட்ட ஒருவர்தான் தல தோனி. மீண்டும் உங்களுக்கு சமைத்துக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன்” எனப் பகிர்ந்துள்ளார் செப் சுரேஷ் பிள்ளை. இந்த ட்வீட் இப்போது இணையத்தில் தோனி ரசிகர்களால் அதிகமாக பகிரப்படுகிறது.

சற்று முன்