- Advertisement -
Homeவிளையாட்டுதோனி அடுத்த சீசன் விளையாடுவாரா மாட்டாரா என்பதை நேரடியாக முதலில் அவர் இவருக்கு தான் கால்...

தோனி அடுத்த சீசன் விளையாடுவாரா மாட்டாரா என்பதை நேரடியாக முதலில் அவர் இவருக்கு தான் கால் செய்து கூறுவார் – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் பேட்டி

- Advertisement-

ஐந்தாவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் அடுத்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவாரா மாட்டாரா என்பது தான் உலகம் முழுவதும் உள்ள தோனி ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தோனியின் பங்களிப்பு குறித்தும், அவர் ஒரு முடிவை எடுத்தால் அது குறித்து அவர் யாரிடம் தெரிவிப்பார் என்பது குறித்தும் சிஎஸ்கே அணியின் சிஇஓ திரு காசி விஸ்வநாதன் அவர்கள் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தோனியின் அறுவை சிகிச்சை குறித்து பேசி உள்ள அவர், தற்போது தோனியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்று கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் போது அவருக்கு மூட்டு வலி இருந்தது எல்லோருக்கும் தெரியும். எனினும் நாங்கள் அவரிடம் எந்த ஒரு போட்டியின் போதும் நீங்கள் அந்த போட்டியில் விளையாடப் போகிறீர்களா இல்லையா என்று கேட்டதே கிடையாது.

அவரால் விளையாட முடியாத ஒரு சூழல் இருந்தால் அவரே எங்களிடம் அதை நேரடியாக தெரிவிப்பார். இந்த சீசனை பொறுத்தவரை அவர் மூட்டுவலி என்னும் ஒரு பெரிய போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டி இருந்தது. எனினும் அணிக்கான அவரது அர்ப்பணிப்பும், அவரது தலைமை மற்றும் அணி அவரால் எவ்வாறு பயனடைந்தது எனப்து நம் அனைவருக்கும் தெரியும்.

பைனல் முடியும் வரை அவர் தனது மூட்டு வலி குறித்து எந்த விதமான புகாரையும் யாரிடமும் தெரிவிக்கவில்லை. அவர் போட்டிகளின் போது பல நேரங்களில் சிரமப்படுகிறார் என்பது நமக்குத் தெரியும். பைனல் முடிந்த பிறகு அவர், எனக்கு மூட்டு வலி அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று எண்ணுகிறேன் என்று கூறினார். இப்போது அந்த அறுவை சிகிச்சை முடிந்து அவர் நலமாக உள்ளார்.

- Advertisement-

பைனல் முடிந்த பிறகு எங்களிடம் அவர் கூறியது என்னவென்றால், நான் தற்போது மும்பை சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, அதன் பிறகு ரீஹாப்பிற்காக ராஞ்சி செல்ல வேண்டும் என்றார். ருதுராஜின் திருமணத்திற்கு பிறகு நான் அவரை பார்த்தேன். அவர் நலமாக இருந்தார். அப்போது அவர் இன்னும் மூன்று வாரங்கள் ஓய்வுக்குப் பிறகு நான் ரீஹாப்பை தொடங்குவேன் என்றார். முன்பு கூறியது போலவே ஜனவரி பிப்ரவரி மாதம் வரைக்கும் அவர் விளையாடப் போவது கிடையாது. நாமும் அது குறித்து அவருக்கு நினைவு படுத்த தேவையில்லை.

என்ன செய்வதென்று அவருக்குத் தெரியும். அவரிடம் நாம் எதையும் கேட்கப் போவது கிடையாது. அவரே நம்மிடம் தகவலை தெரிவிப்பார். அவர் என்ன செய்தாலும் முதலில் அவர் ஸ்ரீனிவாசனுக்கு (சிஎஸ்கே அணியின் உரிமையாளர்) கால் செய்து அதை தெரிவிப்பார். உண்மையை கூற வேண்டும் என்றால் அவர் எதையும் மறைக்காமல் நேரடியாக கூறக்கூடிய ஒருவர். அவர் நினைப்பதை சரியாக நம்மிடம் கூறி விடுவார். 2008 இல் இருந்து இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது, இனிமேலும் அது அப்படித்தான் நடக்கும் என்று கூறியுள்ளார் காசி விஸ்வநாதன். அப்போ, கூடிய விரைவில் தோனியின் நிலைப்பாடு குறித்து சென்னை அணியின் உரிமையாளருக்கு கால் வரும் என்று நாம் தெறிப்பார்களாம்.

சற்று முன்