நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே-வின் வெற்றியானது சென்னை மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் வெற்றியாக மாறி உள்ளது. அதற்க்கு காரணம் ஒரே ஒருவர் தான். அவர் பெயர் தான் தோனி. அவர் செய்யும் அனைத்து விடயங்களையும் அவரது ரசிகர்கள் மட்டும் அல்லாது கிரிக்கெட் வல்லுனர்களும் கூட உற்று நோக்குகின்றனர்.
அந்த வகையில் சென்னை அணியின் கேப்டனான தோனி குறித்து அந்த அணியின் சிஇஓ திரு காசி விஸ்வநாதன் அவர்கள் சில தகவல்களை ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, டி20 பார்மட் குறித்து உங்களுக்கே நன்றாக தெரியும். டி20 பார்மட் என்பது மிக கடினமான அதே சமயம் கணிக்க முடியாத ஒரு பார்மட்டாக இருந்து வருகிறது.
இப்படியான ஒரு பார்மட்டில் இதுவரை நாங்கள் பெரும்பாலும் நாக்அவுட்டிற்கு குவாலிபை ஆகிவிடுவோம். அதற்க்கு மிக முக்கிய காரணம் தோனியின் திறமை மற்றும் அவருடைய கேப்டன்சீ தான். அவர் கூறுவது ஒன்றே ஒன்று தான். முதல் நாம் நாக்அவுட்டிற்கு தேர்வாக வேண்டும். டீம் செலெக்ஷனில் நாகவுட்டிற்கு குவாலிபை ஆவது போன்ற ஒரு அணியை உருவாக்க வேண்டும்.
நாக் அவுட்டிற்கு வந்த பிறகு எல்லாமே ஜாக்பாட் தான். அதன் பிறகு வரும் அனைத்து போட்டிகளும் நாக் அவுட் மாதிரி தான் என்று கூறுவார். பொதுவாக அணி வீரர்களிடம் இருந்து எப்படி அவர்களின் திறனை சிறப்பாக வெளிக்கொணருகிறோம் என்பது தான் முக்கியம். இதை தோனி சிஎஸ்கே விற்காக தொடர்ந்து செய்து வருகிறார். இனியும் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
சிஎஸ்கே தோர்த்தாலும் சரி, ஜெயித்தாலும் சரி, இதுவரை நாங்கள் தோனியிடம் சென்று இதை இப்படி செய்திருக்கலாமே, அதை அப்படி செய்திருக்கலாமே என்று கூறியதே கிடையாது. கிரிக்கெட் குறித்து நாங்கள் எந்த ஒரு அறிவுரையும் அவருக்கு வழங்கியதில். எல்லாமே தோனி மற்றும் கோட்ச் எடுக்கும் முடிவு தான்.
இதையும் படிக்கலாமே: இருக்கறதுலயே மோசமான தோல்வி அது தான். திரும்பி வர டிக்கெட் கூட இல்ல. ரெண்டு நாள் ரூம்லயே அடஞ்சி கிடந்தன். பல வருட சோகத்தைப் பகிர்ந்த சேவாக்
தோனியின் தொடர்ச்சியான மற்றும் நிலையான செயல்திறன் தான் சிஎஸ்கே விற்கு இவளவு பெரிய ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது. அதே போல சிஎஸ்கே ரசிகர்களுக்கு நாங்களும் நல்ல ஒரு மரியாதை தருகிறோம். ரசிகர்களை சரியாக மதிக்கவில்லை என்றால் முன்னுக்கு வரவே முடியாது என்று அவர் கூறியுள்ளார். இந்த போட்டியை அவர் எப்பொழுதோ கொடுத்திருந்தாலும், அவர் கூறி இருக்கும் விடையங்கள் யாவும் இப்போது வைரலாகி வருகிறது