- Advertisement -
Homeவிளையாட்டுஇதோ வருகிறது புதிய ரூல்ஸ். ஐபிஎல் போன்ற டி20 லீக்களுக்கு ஐசிசி வைக்கப்போகும் புதிய செக்....

இதோ வருகிறது புதிய ரூல்ஸ். ஐபிஎல் போன்ற டி20 லீக்களுக்கு ஐசிசி வைக்கப்போகும் புதிய செக். இதுக்கு மேல விட்டா கிரிக்கெட் நிலமை மோசமாகிடும். பிளேயர்ஸ்கு இனி கொஞ்சம் கஷ்டம் தான் போல

- Advertisement-

உலகெங்கிலும் தற்போது டி20 லீக் போட்டிகள் அதிகரித்து வரும் வேளையில் அது சர்வதேச போட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏனெனில் சர்வதேச போட்டிகளை விட பிரான்சைஸி லீக் போட்டிகளில் அதிக அளவில் பணம் கிடைப்பதால் முன்னணி வீரர்களும் அங்கு சென்று விளையாடவே ஆர்வம் காட்டுகின்றனர். அதே வேளையில் தேசிய அணிக்காக விளையாட முடியாத நிலையும் ஏற்படுகிறது.

அந்த வகையில் ஏற்கனவே பல வீரர்கள் தங்களது தேசிய அணியில் இருந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு பிரான்சைஸி கிரிக்கெட்டில் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜேசன் ராய் தேசிய அணியின் காண்ட்ராக்ட்டை முறித்து கொண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள லீக் போட்டியில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இப்படி முன்னணி வீரர்கள் பலரும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டாமல் பிரான்சைஸி கிரிக்கெட்டில் விளையாட ஆர்வம் காட்டி வருவதால் கூடிய விரைவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு அபாயம் ஏற்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இந்த அபாயத்திலிருந்து தப்பிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சில விதிமுறைகளை அடுத்த மாதம் அறிவிக்க உள்ளதாக தி டெலிகிராப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி வெளிநாடுகளில் நடைபெறும் டி20 பிரான்சைஸி போட்டிகளில் பிளேயிங் லெவனில் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்ற விதிமுறையை அறிவிக்க படவுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement-

இந்த நான்கு வெளிநாட்டு வீரர்கள் சம்மந்தமான புதிய விதிக்கு முக்கிய காரணியாக இருப்பது இரண்டு புதிய லீக் தொடர்கள் தான். சமீபத்தில் UAE-யில் நடந்த இன்டர்நேஷனல் லீக் டி20 போட்டியில், ஒரு அணியில் 9 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதே வேலையில் அமெரிக்காவில் ஜூலை மாதம் முதல் நடக்க உள்ள டி20 லீக் தொடரில் ஒரு அணிக்கு 9 வெளிநாட்டு வீரர்களும், பிலேயிங் 11இல் 6 வெளிநாட்டு வீரர்களும் அனுமதிக்க பட உள்ளனர் என்பது தான்.

அதேபோன்று அந்த நான்கு வீரர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களோ அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு அவர்களின் ஊதியத்தில் 10% தொகையை அந்த லீக் தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி அனுமதி இல்லாமல் லீக் போட்டிகள் நடைபெறுமாயின் அது அங்கீகரிக்கப்படாத தொடராகவே அறிவிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே: ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டால், இந்திய அணிக்கு டெஸ்ட் கேப்டனாக வர வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.

அதே போல, இந்த விதிமுறைகளை பின்பற்றாத பிரான்சைஸி லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தடை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம், வெளியேறும் வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது மட்டுமின்றி அவர்களின் ஊதியத்தில் 10% தொகையை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு வழங்கினால் மட்டுமே இது போன்ற பிரான்சைஸி லீக்கில் விளையாடும் வீரர்களின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைக்க முடியும் என்பதால் இந்த விதிமுறைகள் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்