நாம் எவ்வளவு அர்ப்பணிப்போடு ஒரு செயலை செய்கிறோமோ அதற்கேற்ற பலன் தான் நமக்கு கிடைக்கும் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். அப்படி கிரிக்கெட்டிற்காக தன்னை அர்ப்பணித்து இன்று உலகின் மிக முக்கியமான ஒரு பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி. சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது கூட அவருக்கு கடுமையான ஜுரம் இருந்தும் அவர் இந்திய அணிக்காக களத்தில் நின்று சிறப்பாக ஆடியதை நாம் பார்த்தோம்.
இப்படி, இந்திய அணிக்காக கோலி எத்தனையோ விடயங்களை செய்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் இஷாந்த் சர்மா கோலியை பார்த்து தான் வியந்த தருணம் குறித்து பல புதிய தகவலை கூறி உள்ளார். அதில் ஒரு சமயம் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்ட பிறகு நிகழ்ந்து ஒரு சம்பவம் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில்,
பார்ட்டி மற்றும் டாட்டூகள் மீது கோலி கொண்ட ஆர்வத்தை நான் பார்த்திருக்கிறேன். நாங்கள் ஒரு சமயம் கொல்கத்தாவில் அண்டர் 19 போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். கோலி நாள் முழுக்க களத்தில் இருந்தார். அடுத்த நாள் பேட்டிங் செய்யவேண்டும். ஆனால் அன்றிரவு முழுவது கோலி பார்ட்டி செய்தார். அடுத்த நாள் பேட்டிங் செய்த அவர் 250 ரன்கள் அடித்தார்.
என்னைப் பொறுத்தவரை அவரைப் பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், உலகக் கோப்பைக்குப் பிறகு 2012 இல் தொடங்கி அவர் தன் உடலை எவ்வாறும் செம்மையாக மாற்றினார் என்பது தான். அவர் கடுமையாக பயிற்சி செய்தார். அதே சமயம் அவருடைய உணவு பழக்கம் காரணமாக அவருடைய மன உறுதி மற்றும் கிரிக்கெட் அடுத்த நிலைக்கு சென்றது.
சச்சின் டெண்டுல்கர் எங்களிடம், எதிர்பார்ப்போடு கூடிய நம்பிக்கை என்பது வெறும் வார்த்தை அல்ல அது ஒரு உணர்வு என்று கூறுவார். ஆனால் நீங்கள் கோலியிடம் கேட்டால், அவரது அகராதியில் எதிர்பார்ப்பு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை. வெறும் நம்பிக்கை மட்டும் தான் இருக்கும். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற கருத்துடையவர் அவர் என்று கூறி உள்ளார் இஷாந்த் சர்மா.
இஷாந்த் சர்மாவின் கூற்றுப்படி கோலி மிகவும் நபீக்கை உடையவர் என்பதை நாம் களத்திலேயே பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். அதே போல தன்னுடைய உடலை எவ்வாறு மேம்படுத்தி, உலகின் மற்ற வீரர்களுக்கெல்லாம், ஒரு வீரர் தன் உடலை எப்படி வைத்திருக்க வேண்டும் என்பதற்கு அவர் எடுத்துக்காட்டாய் உள்ளார் என்பதையும் பார்த்து வருகிறோம்.