தோனி ரசிகர்கள் நான் சீக்கிரம் அவுட் ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் காத்துக் கொண்டும் இருக்கிறார்கள். சென்னை ரசிகர்கள் குறித்து பேசிய ஜடேஜா

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக் போட்டியானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது மட்டுமின்றி பிளே ஆப் சுற்றிற்கான தங்களது வாய்ப்பினையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது என்றே கூறலாம்.

இந்நிலையில் அந்த போட்டியின் போது சென்னை அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்த ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 21 ரன்கள் அடித்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்ததால் அவரது அந்த சிறப்பான பங்களிப்பு காரணமாக ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் அந்த போட்டி முடிந்து ஆட்டநாயகன் விருதினை வென்ற ஜடேஜா வெற்றி குறித்தும், சென்னை அணி ரசிகர்கள் வேண்டுதல் குறித்தும் சில ஜாலியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறுகையில் : ஒரு ஸ்பின்னராக நான் சேப்பாக்கம் மைதானத்தில் பந்து வீசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் இங்கு கிடைக்கும் டர்ன் பற்றி எனக்கு நன்றாக தெரியும்.

அதோடு நாங்கள் இந்த மைதானத்திலேயே நிறைய பயிற்சி செய்வதால் எங்களுக்கு லைன் மற்றும் லென்த் என்ன என்று தெரியும். அதுதான் எங்களுடைய ஹோம் கிரவுண்டில் எங்களுக்கு கிடைக்கும் கூடுதல் சாதகம் என்று கூறினார். மேலும் தோனியின் ரசிகர்கள் குறித்து பேசிய ஜடேஜா கூறுகையில் : நான் ஏழாவது வீரராக பேட்டிங் செய்ய களமிறங்கும் போது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து “தோனி, தோனி” என கத்தி ஆரவாரம் செய்கிறார்கள். அதேபோன்று நான் ஆட்டமிழந்து வெளியேறும் போது தோனி உள்ளே வருவார் என்பதனால் நான் எப்போது அவுட் ஆவேன் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிய ஜடேஜா கூறினார்.

- Advertisement -

எது எப்படி இருந்தாலும் எனக்கு அணி வெற்றி பெற்றால் போதும் என்று ஜாலியாக சிரித்துக்கொண்டே ஜடேஜா பேசினார். இப்படி சென்னை ரசிகர்கள் பற்றி ஜடேஜா பேசிய இந்த கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளன. ஜடேஜா கூறுவதைப் போன்று சேப்பாக்கம் மைதானத்தில் எப்போது போட்டி நடைபெற்றாலும் ஜடேஜா ஆட்டமிழந்து வெளியேறும் போது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து தோனிக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதை நாமும் பார்த்து வருகிறோம்

- Advertisement -

சற்று முன்