- Advertisement -
Homeவிளையாட்டுஅந்த விஷயத்தை கிரவுண்ட்லயே மறந்துட்டோம்.. தோல்விக்கு பின் தவறை ஒப்புக்கொண்ட கேப்டன் கே எல்...

அந்த விஷயத்தை கிரவுண்ட்லயே மறந்துட்டோம்.. தோல்விக்கு பின் தவறை ஒப்புக்கொண்ட கேப்டன் கே எல் ராகுல்

- Advertisement-

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடையே நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தெ. ஆ அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதில் டாஸ் வென்ற தெ. ஆ அணி முதல் போட்டியை போல பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் தெளிவாக பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய இந்திய அணியில் ருத்துராஜ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் கைகோர்த்த சாய் சுதர்சன் – கே எல் ராகுல் இணை, சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. இருவரும் அரைசதம் கடந்த நிலையில், தனது இரண்டாவது ஒரு நாள் போட்டியில் ஆடும் சாய் சுதர்சன், இரண்டிலுமே அரைசதம் அடித்து அசத்தி உள்ளார். அவர்கள் இருவரும் அவுட்டான பிறகு, இந்திய அணியில் யாரும் அதிக ரன்கள் குவிக்கவில்லை.

இதனால், இந்திய அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய தெ. ஆ அணி, முதல் போட்டியை போல ரன் சேர்க்க பார்த்து விக்கெட்டுகளை இழக்காமல் நிதானமாக ஆடியது. தொடக்க வீரர் ஹெர்னிக்ஸ் 52 ரன்கள் எடுத்து அவுட்டாக, மற்றொரு தொடக்க வீரர் சோர்ஸி முதல் ஒரு நாள் சதத்தை இந்த போட்டியில் அடித்திருந்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 119 ரன்கள் எடுக்க தெ. ஆ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும், தற்போது தொடரும் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனிடையே, தோல்விக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல், “அடுத்த போட்டியில் டாஸை ஜெயிக்க வேண்டுமென நினைக்கிறேன். ஆரம்பத்தில் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. ஆனால், நானும் சுதர்சனும் இணைந்து ரன்கள் சேர்த்தோம். நாங்கள் இன்னும் ஒரு 50 முதல் 60 ரன்கள் சேர்த்திருந்தால் நிச்சயம் அது மாற்றத்தை உருவாக்கி இருக்கும்.

- Advertisement-

250 ரன்கள் வரை நாங்கள் அடித்திருந்தாலே போட்டியை ஜெய்த்திருக்க முடியும் என்று தான் கருதினோம். ஆனால், முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். தனி ஒரு வீரராக அவர்கள் என்ன திட்டம் போடுகிறார்களோ அதை ஒரு அணியாக நீங்கள் நம்ப வேண்டும். கிரிக்கெட்டில் சரி, தவறு என எதுவுமே இல்லை. உங்கள் அணிக்காக நீங்கள் சிறப்பாக ஏதாவது செய்ய முயற்சிக்க வேண்டும்.

முதல் 10 ஓவர்கள் அருமையாக பந்து வீசினோம். ஆனால், அதனை தொடர முடியவில்லை. நாங்கள் பேட்டிங் செய்தது கூட எங்களுக்கு உதவி செய்யவில்லை என்பது தான் உண்மை. மூன்றாவது ஒரு நாள் போட்டிக்கு முன்பாக, மைதானத்தில் தோல்வி அடைந்ததை அங்கேயே விட்டுவிட்டு அடுத்த போட்டிக்காக கவனம் செலுத்த போகிறோம்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்