- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலி, ருத்து, ரியான்.. ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர்களாக மூவரும் செஞ்ச அபார சாதனை..

கோலி, ருத்து, ரியான்.. ஐபிஎல் வரலாற்றில் இந்திய வீரர்களாக மூவரும் செஞ்ச அபார சாதனை..

- Advertisement 1-

ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே கடந்த 16 சீசன்களில் நடைபெறாத ஒரு அதிசய சம்பவம், சமீபத்தில் நடந்து முடிந்த சீசனில் அரங்கேறி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தலைநிமிர வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் என வந்து விட்டாலே சிக்ஸர்கள் மற்றும் ஃபோர்கள் பறப்பது தான் வாடிக்கையாக இருக்கும். பந்து வீச்சாளர்களுக்கு இடமே கொடுக்காமல் பவுண்டரிக்கு வெளியே பந்துகள் அதிகம் சென்று கொண்டிருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு இந்த இரண்டு மாதங்களே மிகப்பெரிய திருவிழா போல தான் இருக்கும்.

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் வாண வேடிக்கை நிகழ்த்தி இருந்த நிலையில், சமீபத்தில் நடந்த இறுதிப் போட்டி வரைக்கும் அது தொடர்ந்து அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது. இதனால் ஐபிஎல் பற்றிய அறிவிப்பு வந்தாலே ரசிகர்கள் குதூகலமாகி வருவதுடன் மட்டுமில்லாமல் இறுதி போட்டி முடிவது வரைக்கும் ஒரு நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை இதனை ரசித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

ஐபிஎல் போட்டி முடிந்து டி 20 உலக கோப்பை நெருங்கினாலும் இன்னும் ஐபிஎல் பற்றிய பேச்சு பரவலாக இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் மற்ற சீசன்களை விட இந்த சீசன் அதிரடிக்கு பெயர் போயிருந்த நிலையில் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சாதனைகளையும் இந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சொந்தமாக்கி உள்ளது.

ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் உள்ளிட்ட பல்வேறு புதிய மைல்கல்லும் ஐபிஎல் 2024 தொட்டிருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் செய்த ஒரு முக்கியமான அரிய சாதனையை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். நடப்பு ஐபிஎல் தொடரில் இந்திய அணி வீரர் விராட் கோலி 741 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப்பை வென்றிருந்தார்.

- Advertisement 2-

இந்த சீசனில் நிறைய வீரர்கள் 500 ரன்களை தாண்டி இருந்த நிலையில் இரண்டாவது இடத்தில் சிஎஸ்கே கேப்டன் ருத்துராஜ் 583 ரன்களுடனும், மூன்றாவது இடத்தில் ரியான் பராக் 573 ரன்களுடனும் உள்ளனர். அப்படி இருக்கையில் ஒரு ஐபிஎல் சீசனிலேயே அதிக ரன் அடித்த முதல் மூன்று வீரர்களும் இந்தியர்களாக இருந்தது இது தான் முதல் முறை.

இதற்கு முன்பாக இந்தியர்கள் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தாலும் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் நிச்சயம் ஒரு வெளிநாட்டு வீரர் வந்துவிடுவார். ஆனால் தற்போது அவர்கள் எல்லாம் தாண்டி இந்திய வீரர்கள் முதல் மூன்று இடத்தை பிடித்து சாதித்துள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

சற்று முன்