- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணில திறமைசாலி பலர் இருந்தாலும் அவங்களோட மனநிலையில பிரச்சனை இருக்கு. இத அவங்க மாத்திக்காம...

இந்திய அணில திறமைசாலி பலர் இருந்தாலும் அவங்களோட மனநிலையில பிரச்சனை இருக்கு. இத அவங்க மாத்திக்காம இருந்தா கப் அடிக்கறதெல்லாம் கஷ்டம் தான் – மேத்யு ஹெய்டன் கருத்து

- Advertisement-

உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணிகளுள் இந்திய கிரிக்கெட் அணியும் ஒன்றாக உள்ளது. மிகச்சிறந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆனால் கடந்த 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஐசிசி நடத்தும் போட்டித் தொடர்களில் ஒரு கோப்பையைக் கூட வெல்லவில்லை.

ஆனால் எல்லா தொடர்களிலும் இறுதிக்கட்டம் வரை செல்லும் இந்திய அணி அரையிறுதியிலோ அல்லது இறுதிப் போட்டியிலோ தோற்று வெளியேறுகிறது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி இருக்கும் நிலையில் இதற்கான காரணத்தை விவரித்துள்ளார் ஆஸி அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யு ஹெய்டன்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “இந்திய அணியில் திறமைக்கோ திறமையான வீரர்களுக்கோ பஞ்சமே இல்லை. ஆனால் இந்திய அணி வீரர்களின் மனநிலையில் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதுதான் முக்கிய போட்டிகளில் தோல்விக்குக் காரணமாக அமைகிறது. இந்திய அணியில் இடம் கிடைப்பதற்காக லட்சக்கணக்கானவர்கள் காத்திருக்கிறார்கள்.

அதனால் அணியில் இடம் கிடைத்த வீரர்களுக்கு தனக்கான இடம் குறித்த பதற்றமும் அழுத்தமும் இருக்கிறது. இந்திய ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அதனால் வீரர்களுக்கு அழுத்தம் அதிகமாகிறது. இதனால்தான் முக்கியமான போட்டிகளில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்

- Advertisement-

இந்திய வீரர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் ‘உங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்.  கோப்பையை வெல்வதை பற்றியெல்லாம் யோசிக்காதீர்கள்.  எந்த அழுத்தமும் இல்லாமல் விளையாடுங்கள். அப்போதுதான் உங்களின் சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படும்.

இதையும் படிக்கலாமே: சிஎஸ்கே அணிக்கு வரப் போறாரா சஞ்சு சாம்சன்? அஸ்வினுக்கு நெருக்கமான பிரபல கிரிக்கெட் ஆய்வாளர் சொன்ன பரபரப்பு தகவல் – வருத்தத்தில் RR ரசிகர்கள்

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிரிக்கெட் மட்டும் இல்லாமல் பல போட்டிகளில் ரசிகர்கள் ஆர்வம் செலுத்துகிறார்கள். நான் ஆஸி அணிக்காக விளையாடிய போது நான் சாலையில் சென்றால் கூட பலருக்கும் என்னைத் தெரியாது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. உள்ளூர் கிரிக்கெட் விளையாடுபவர்களுக்குக் கூட மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

சற்று முன்