- Advertisement -
Homeவிளையாட்டுமேத்யூ ஹெய்டன் வெளியிட்ட உ.கோ உத்தேச இந்திய அணி.. முக்கிய வீரருக்கு இடம் இல்லை.. நல்லா...

மேத்யூ ஹெய்டன் வெளியிட்ட உ.கோ உத்தேச இந்திய அணி.. முக்கிய வீரருக்கு இடம் இல்லை.. நல்லா ஆடியும் லிஸ்டில் இல்லையே…

- Advertisement-

உலக கோப்பை 50 ஒவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த உலக கோப்பையில் உலகில் உள்ள டாப் கிரிக்கெட் அணிகள் பங்கு கொள்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடுகிறது.

உலக கோப்பை நடைபெறும் அனைத்து மைதானங்களும் தயார் நிலையில் இருக்கின்றன. இதன் அரையிறுதி ஆட்டங்கள் மும்பை, கொல்கத்தாவிலும், இறுதி ஆட்டம் குஜராத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்திலும் நடைபெற உள்ளது. உலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய மூன்று அணிகளுக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் பலர் கூறுகின்றனர்.

இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில், அதற்கு அடுத்தபடியாக விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என பேட்டிங் வரிசை மிகவும் பலமானதாக உள்ளது. இதில் குறிப்பிடப்படும் வகையில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்து வீசவும் செய்வர். இது இந்திய அணிக்கு கூடுதல் பலமாகும். பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிரஜ் என அனல் பறக்கும் பவுலர்களை இந்திய அணி கொண்டுள்ளது.

போட்டிகள் அனைத்தும் சொந்த மண்ணில் நடைபெறுவது இந்திய அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியும், 2011 இல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணியும் உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் நல்ல ஒரு அணி அமைந்தும் இந்திய அணி எதிர்பாராத விதமாக கோப்பையை வெல்ல இயலவில்லை. எனவே இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்ல நல்லதொரு வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்பை இந்திய அணி வீரர்கள் சரியாக பயன்படுத்தி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே இந்திய அணி ரசிகர்களின் ஒட்டுமொத்த கனவாகவும் உள்ளது.

- Advertisement-

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில மாத காலமே உள்ள நிலையில் உலகில் உள்ள பல மூத்த கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் அனைவரும் அவர்களுக்கு பிடித்த வீரர்களை அந்தந்த அணியில் இடம் பெறுவார்கள் என கணித்து வருகிறார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் இடது கை அதிரடி பேட்ஸ்மனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முன்னாள் தொடக்க ஆட்டக்காரருமான மேத்யூ ஹெடன் உலகக்கோப்பையில் பங்கு கொள்ள உள்ள இந்திய அணியின் உத்தேச வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்ட அணியில் நாம் அனைவரும் எதிர்பார்த்தது போல ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அவர் தேர்வு செய்த அணியில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் இடம்பெறவில்லை. இதில் சமீப காலத்தில் இந்திய அணியின் வளர்ந்து வரும் ஸ்டாராக கருதப்படும் திலக் வர்மா அவர் தேர்வு செய்யப்பட்ட உத்தேச அணியில் இடம் பெறாதது அதிர்ச்சியூட்டும் விதமாக இருக்கிறது.

சற்று முன்