- Advertisement -
Homeவிளையாட்டுஅவன் தான் கரெக்ட்.. ஏலத்துல அந்த பையன மிஸ் பண்ணிடாதீங்க.. சிஎஸ்கேவுக்கு தோனி போட்ட ஆர்டர்..

அவன் தான் கரெக்ட்.. ஏலத்துல அந்த பையன மிஸ் பண்ணிடாதீங்க.. சிஎஸ்கேவுக்கு தோனி போட்ட ஆர்டர்..

- Advertisement-

சிஎஸ்கேவில் யார் இடம் பிடிப்பார்கள், மும்பை அணியின் கேப்டனாக போவது யார், கொல்கத்தா அணி ஷ்ரேயஸ் ஐயரை விடுவிக்கப் போகிறதா என ஒவ்வொரு அணிகள் பற்றியும் உறுதியாகாத தகவல்கள் இணையத்தில் வலம் வந்தபடி உள்ளது. ஐபிஎல் தொடர் என வந்துவிட்டால் சர்வதேச போட்டிகளுக்கு நிகராக கவனம் பெறுவதோடு மட்டுமில்லாமல் அது தொடர்பான செய்திகள் கூட இணையவாசிகளை அதிகமாக கவர்ந்து விடும்.

பல நாடுகளைச் சேர்ந்த சர்வதேச வீரர்கள் ஒரே அணியில் இணைந்து ஆடும் போது அதன் விறுவிறுப்பும் பல மடங்கு அதிகமாக இருப்பதால் உலக அளவில் சிறந்த டி20 தொடராக ஐபிஎல் இருந்து வருகிறது. மேலும் பல வெளிநாட்டு வீரர்களும் இந்த தொடரில் ஆடுவதற்கு ஆர்வம் காட்டுவதுடன் இந்திய இளம் வீரர்கள் நிறைய பேர் சர்வதேச அரங்கிற்கான வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்து வருகிறது.

இப்படி பல சாதகமான விஷயங்கள் ஐபிஎல் தொடரை சுற்றி இருக்க அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நவம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்காக ஒவ்வொரு அணிகளுக்கும் சுமார் 125 கோடி தொகை வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் 75 கோடிக்கு அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் பிசிசிஐ அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளும் அடுத்த சில ஆண்டுகளை கருத்தில் கொண்டு இளம் வீரர்கள் மற்றும் சீனியர் வீரர்களை தக்க வைப்பதை முடிவு செய்துவரும் நிலையில் சில அணிகளுக்கு இடையே குழப்பங்கள் உருவாகியுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த ஐபிஎல் தொடருக்கு நடுவே ராகுலுக்கும் லக்னோ அணி உரிமையாளருக்கும் இடையே பிரச்சனை இருந்தது வெளிப்படையாக தெரிய நிச்சயம் அவர் தொடர்ந்து ஆடமாட்டார் என்பதும் உறுதியாகி இருந்தது.

- Advertisement-

அந்த வகையில் ராகுல் லக்னோவில் இருந்து வெளியேற உள்ள நிலையில், கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரும் கொல்கத்தாவில் தொடர மாட்டார் என கருதப்படுகிறது. இந்த இரண்டு பேரை போல மற்றொரு கேப்டனான டெல்லி வீரர் ரிஷப் பந்த்தை விடுவிப்பதற்காக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.

டெல்லி நிர்வாகத்திற்கும், ரிஷப் பந்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர் டெல்லி அணியில் இருந்து விலக முடிவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், சிஎஸ்கே உள்ளிட்ட அணிகள் அவரை சொந்தமாக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சிஎஸ்கேவின் விக்கெட் கீப்பராக தோனி இருந்து வரும் நிலையில் தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் அவர் ஆடுவது சந்தேகம்தான்.

இதனால் அடுத்த விக்கெட் கீப்பரை தயாராக்கும் நோக்கில் ரிஷப் பந்த்தை சிஎஸ்கே அணியில் சேர்ந்தால் இன்னும் கூடுதல் பலம் என்றும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ரிஷப் பந்த்தை சிஎஸ்கேவில் இணைப்பதற்கான ஸ்ட்ரேட்டஜியில் கவனம் செலுத்தும்படியும் நிர்வாகத்திடம் தோனி கேட்டுக் கொண்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

சற்று முன்