- Advertisement -
Homeவிளையாட்டுதோனிக்கு இந்திய அணியின் சீப் செலெக்டர் ஆவதற்கு தற்போது தகுதி இல்லை. திறமை இருந்தும் தகுதி...

தோனிக்கு இந்திய அணியின் சீப் செலெக்டர் ஆவதற்கு தற்போது தகுதி இல்லை. திறமை இருந்தும் தகுதி இல்லாமல் போனதற்கு காரணம் இது தான்.

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி கண்ட வெற்றிகரமான கேப்டன்களில் தோனி முதன்மையானவர். அவர் தலைமையில் இந்திய அணி மூன்றுவிதமான ஐசிசி கோப்பைகளையும் வென்றது. 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை அடுத்தடுத்து வென்று சாதனை படைத்தது.

தோனி சர்வதேச போட்டிகளில் 2020 ஆம் ஆண்டு முதல் ஓய்வை அறிவித்தார். அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியுசிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக விளையாடினார். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளாக எந்த போட்டியும் விளையாடாமல் 2020 ஆம் ஆண்டு திடீரென ஓய்வை அறிவித்தார்.

தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஓய்வு பெற்ற பிறகு 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளார். இன்னும் சில ஆண்டுகள் அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சமீபத்தில் பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த பதவிக்கு மிகவும் தகுதியானவர் தோனிதான் என்றும், அவரை பிசிசிஐ அந்த பொறுப்பில் நியமிக்க வேண்டும் எனவும் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் சிலர் கருத்து கூறிவருகின்றனர்.

- Advertisement-

ஆனால் தோனி மற்றும் பிசிசிஐ ஆகிய இரண்டு தரப்புமே அதை விரும்பினாலும், அது நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 2020 ஆம் ஆண்டுதான் ஓய்வுபெற்றார். தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகளாவது ஆகியிருக்க வேண்டும் என்பது விதி. அதனால் தோனி தற்போதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிக்கொண்டு தான் உள்ளார். அதன் காரணமாக தோனியே தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று எண்ணினாலும் அவர் இன்னும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

தற்போது தேர்வுக்குழு தலைவர் பொறுப்ப்புக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக சேவாக் விண்ணப்பிக்க இருந்த நிலையில் அந்த பதவிக்கான குறைவான சம்பளம் காரணமாக அவர் விண்ணப்பிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்பட்டது.

சற்று முன்