- Advertisement -
Homeகிரிக்கெட்இதுவே நான் செஞ்ச பாக்கியம் தான்.. உலக கோப்பை அணியில் சான்ஸ் கிடைக்காதது பற்றி நடராஜன்...

இதுவே நான் செஞ்ச பாக்கியம் தான்.. உலக கோப்பை அணியில் சான்ஸ் கிடைக்காதது பற்றி நடராஜன் சொன்ன வார்த்தை..

-Advertisement-

ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தாலும் டி 20 உலக கோப்பைக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி கடும் விமர்சனத்தை தான் தொடர்ந்து சந்தித்து வருகிறது. நிச்சயம் உலக கோப்பை ஆரம்பிப்பதற்கு முன்பு முக்கியமான வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் என்றும் அதே வேளையில் அதிக தகுதி இல்லாமல் அணியில் இடம் பெற்றிருக்கும் வீரர்களை நீக்க வேண்டும் என்பதும் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் கருத்தாக உள்ளது.

அதில் தற்போது பலரின் ஆதரவை பெற்றுள்ள வீரராக தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் பெயர்தான் உள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக ஆடிவரும் நடராஜன் மிகச் சிறப்பாக தன்னை தயார் செய்து கொண்டு யார்க்கர் பந்துகளில் மிக ஸ்பெஷலிஸ்ட் ஆகவும் இருந்து வருகிறார்.

நம்பர் ஒன் பேட்ஸ்மேன்களாக இருந்தால் கூட நடராஜன் பந்துவீச்சில் யார்க்கர் பந்துகளை சமாளிப்பது கடினமாக உள்ளது. இதனால் இந்த சீசனில் 15 விக்கெட்டுகளை ஒன்பது போட்டிகளில் எடுத்துள்ள நடராஜன் மிக சீக்கிரமாகவும் இந்திய அணிக்காக ஆடுவார் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு டாப் ஃபார்மில் இருக்கும் நடராஜனை உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை என்பது தான் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. சுனில் கவாஸ்கர் தொடங்கி பலரும் நடராஜனுக்கு ஆதரவாக பிசிசிஐ மற்றும் இந்திய அணியை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டும் வருகின்றனர். இந்த நிலையில் தான் டி20 உலக கோப்பை அணியில் இடம்பெறாமல் போனது பற்றி முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார் நடராஜன்.

-Advertisement-

“உலக கோப்பைக்கான இந்திய அணி தேர்வில் என்னை பற்றி உரையாடியதற்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கே நான் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். மூன்று ஆண்டுகள் கழித்து அணியின் தேர்வாளர்கள் எனது பெயரைப் பற்றி பரிசீலித்தது பெரிய விஷயம். நான் தேர்வாவதும், தேர்வாகாமல் போவதும் என்னுடைய கட்டுப்பாட்டில் கிடையாது.

ஆனால் அதே வேளையில் டி20 உலக கோப்பை அணியின் விவாதத்தில் எனது பெயர் இடம் பெற்றதே பெரிய ஒரு பெரிய சாதனையாக தான் நான் பார்க்கிறேன்” என மிகப் பெரிய மனதுடன் தெரிவித்துள்ளார் நடராஜன்.

-Advertisement-

சற்று முன்