- Advertisement -
Homeவிளையாட்டுபோட்டியின் நடுவே அரங்கேறிய கடும் சண்டை. கேக்கவே காது கூசுது. என்னப்பா இப்படி வார்த்தைய விடறீங்க.

போட்டியின் நடுவே அரங்கேறிய கடும் சண்டை. கேக்கவே காது கூசுது. என்னப்பா இப்படி வார்த்தைய விடறீங்க.

- Advertisement-

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 16-ஆம் தேதி பர்மிங்காமில் துவங்கி நடைபெற்று வந்தது. அதன்படி நேற்றுடன் முடிவுக்கு வந்த இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி போட்டியின் இறுதி நாளில் திரில் வெற்றியை ருசித்தது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான உஸ்மான் கவாஜாவை முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்க வைத்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் அவர் ஆட்டமிழந்த பின்னர் மோசமான வார்த்தைகளால் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 386 ரன்களை குவிக்க அதில் கவாஜா மட்டும் தனி ஒருவராக 141 ரன்கள் குவித்து அந்த அணிக்கு பெரிய பங்களிப்பை வழங்கினார். கிட்டத்தட்ட 321 பந்துகளை சந்தித்த அவரை இறுதியில் ராபின்சன் கிளீன் போல்ட் ஆக்கி கடுமையான வார்த்தை வசைபாடல்களுடன் (F***, F*****G P****) அந்த விக்கெட் கொண்டாடத்தில் ஈடுபட்டு அவரை வெளியேற்றினார்.

அவரது இந்த செயல் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் கடும் கண்டனத்தை பெற்றது. அதோடு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் ராபின்சன் செய்தது தவறு என்று தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தனர். முதல் இன்னிக்ஸ்சோடு இந்த சண்டை முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸிலும் இது தொடர்ந்தது. ட்ரிங்க்ஸ் பிரேக்கின் போது மீண்டும் இருவரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர்.

- Advertisement-

இதனால் தான் நீ ஒரு பேட்ஸ்மேனே கிடையாது எனது போல காவாஜா கூற, அதற்க்கு ராபின்சனும் கடுப்பாகி ஏதோ கூறினார். இந்த நிலையில் ஆண்ட்ரசன் அவர்கள் இருவரையும் விளக்கினார். அவர் திட்டிய வார்த்தைகள் ஸ்டம்ப் மைக்கில் முழுமையாக பதிவாகாததால் அவள் பேசியது சரியாக தெரியவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ராபின்சன் அளித்த பேட்டியில் :

நான் எனது சொந்த மண்ணில் முதல் ஆசஷ் தொடரில் விளையாடுகிறேன். எனவே இது போன்ற முக்கியமான போட்டியில் ஆக்ரோஷமாக விக்கெட்டை கொண்டாடுவது இயல்புதான். ஏற்கனவே ரிக்கி பாண்டிங் எல்லாம் இதேபோன்று செய்திருக்கிறார் எனவே நான் செய்ததில் எந்த ஒரு தப்பும் எனக்கு தெரியவில்லை என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ராபின்சனின் இந்த பேட்டிக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஆஸ்திரேலிய துவக்க வீரர் உஸ்மான் கவாஜா கூறுகையில் :

தற்போது ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கு யார் நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள்? என்கிற பலமான போட்டி நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் யார் பேசுவதையும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. இறுதியில் எந்த அணியின் கிரிக்கெட் ஜெயிக்கப்போகிறது என்பதே முக்கியம் என அவர் பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்