- Advertisement -
Homeவிளையாட்டுசென்னை சேப்பாக்கம் மைதானத்தை கண்டு மிரளும் பாக்கிஸ்தான் அணி. காரணம் இது தான். எங்களுக்கு அங்கு...

சென்னை சேப்பாக்கம் மைதானத்தை கண்டு மிரளும் பாக்கிஸ்தான் அணி. காரணம் இது தான். எங்களுக்கு அங்கு இந்த போட்டி வேண்டாம் என்று இப்போது வரை அடம் பிடிக்கிறது.

- Advertisement-

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்குபெறும் சில போட்டிகளுக்கான இடங்களை மாற்றி தருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிசி மற்றும் ஐசிசி-க்கு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூருவில் நடைபெறும் போட்டிக்கான இடத்தையும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறும் போட்டிக்கான இடத்தையும் அப்படியே மாற்றி,

பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியை சென்னையிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி பெங்களூரிலும் மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளது. பாகிஸ்தானின் இந்த கோரிக்கையில் சரியான காரணங்கள் இல்லை என்று குறிப்பிட்டு ஐசிசி மற்றும் பிசிசிஐ இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இந்தக் கோரிக்கைக்கான காரணம்:
சென்னை சேப்பாக்கம் மைதானத்தை பொருத்தவரை அது ஸ்பின்னர்களுக்கு ஏற்ற ஒரு மைதானமாக உள்ளது. ஆப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை அதில் சிறப்பான ஸ்பின்னர்கள் உள்ளனர். அதன் காரணமாக அந்த அணியை சென்னையில் எதிர்கொள்ள வேண்டாம் என்று நினைக்கிறது பாகிஸ்தான்.

அதனால் ஆப்கானிஸ்தான் அணியை பெங்களூருவில் எதிர்கொண்டால் பெங்களூருவின் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதால் பாபர் அசாம் போன்ற வீரர்கள் ஆப்கானிஸ்தான் பௌலர்களை தினரடிப்பார்கள் என்பது பாகிஸ்தானின் நம்பிக்கையாக உள்ளது.

- Advertisement-

அதேபோல பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை சென்னையில் எதிர்கொண்டால் முஹம்மது நவாஸ், சதாப் கான் உள்ளிட்ட வீரர்கள் மூலம் ஆஸ்திரேலிய வீரர்களை எதிர்கொள்ள முடியும் என்று நம்புகிறது பாகிஸ்தான். இப்படி மாற்றுவதன் மூலம் இருபோட்டிகளும் தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்ற ஒரு கணக்கை போடுகிறது பாகிஸ்தான்.

பொதுவாகவே பாதுகாப்பு காரணங்களுக்காக மட்டுமே போட்டிக்கான இடம் மாற்றப்படும். ஆனால் அது போன்று எந்தவிதமான காரணமும் இங்கு கிடையாது. 2016 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டியானது தர்மசாலாவில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டது பாதுகாப்பு காரணங்களுக்காக தான். ஆனால் இப்போது பாகிஸ்தான் கேட்பது முற்றிலும் அந்த அணிக்கு சாதகமான ஒரு நிலை வேண்டும் என்பதற்காகவே.

அதேபோல் இந்த இரு போட்டிகளை மட்டும் தான் பாகிஸ்தான் மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்கிறதா என்றால் இல்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியையும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் போட்டிக்கான இடத்தையும் மாற்ற சொல்லி பாகிஸ்தான் கோரிக்கை வைக்கிறது.

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியின் உத்தேச அட்டவணை
அக்டோபர் 6 – பாகிஸ்தான் vs குவாலிஃபயர் – ஹைதராபாத்
அக்டோபர் 12 – பாகிஸ்தான் vs குவாலிபயர் – ஹைதராபாத்
அக்டோபர் 15 – பாகிஸ்தான் vs இந்தியா – அகமதாபாத்
அக்டோபர் 20 – பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா – பெங்களூரு
அக்டோபர் 23 – பாகிஸ்தான் vs ஆப்கானிஸ்தான் – சென்னை
அக்டோபர் 27 – பாகிஸ்தான் vs சவுத் ஆப்பிரிக்கா – சென்னை
அக்டோபர் 31 – பாகிஸ்தான் vs பங்களாதேஷ் – கொல்கத்தா
நவம்பர் 5 – பாகிஸ்தான் vs நியூசிலாந்த் – பெங்களூரு
நவம்பர் 12 – பாகிஸ்தான் vs இங்கிலாந்து – கொல்கத்தா

சற்று முன்