- Advertisement 3-
Homeவிளையாட்டுஇன்னும் ஒன்னு தான் பாக்கி.. ஓய்வை அறிவித்த கோலிக்கு டிராவிட் கொடுத்த புது அசைன்மென்ட்..

இன்னும் ஒன்னு தான் பாக்கி.. ஓய்வை அறிவித்த கோலிக்கு டிராவிட் கொடுத்த புது அசைன்மென்ட்..

- Advertisement 1-

இதற்கு முன்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு அரையிறுதி போட்டி தொடங்கி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி வரையில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப் பெரிய வேதனையாக தான் இருந்தது. இந்த இரண்டு போட்டிகள் நடந்த ஜூலை 9 மற்றும் நவம்பர் 19 ஆகிய நாட்களை கேட்டாலே இந்தியர்களின் மன நிம்மதியே போய் விடும் அளவுக்கு அந்த இரண்டு தோல்விகளும் அமைந்திருந்தது.

அடுத்து ஏதாவது ஒரு பெரிய தொடரில் ஐசிசி கோப்பையை வெல்வது மட்டும் தான் இதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் பலரும் தெரிவிக்க, அதற்கு மத்தியில் தான் டி20 உலக கோப்பைத் தொடர் பற்றிய அறிவிப்பும் வந்து சேர்ந்தது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்த இந்த தொடரில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி கால் பதிக்க, தொட்டதெல்லாம் வெற்றி என்று தான் வீறு நடையை போட்டு வந்தனர்.

இறுதி போட்டி வரை இந்த கம்பீர நடை தொடர, தென்னாபிரிக்க அணியை த்ரில் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் அசத்தி இருந்தது இந்தியா. 17 ஆண்டுகள் கழித்து டி20 உலக கோப்பையையும், 13 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை ஒன்றையும் சொந்தமாக்கி உள்ளது. இதன் ஒவ்வொரு தருணமும் போட்டியை பார்த்த ரசிகர்களுக்கே நெகிழ்ச்சியாக இருக்க, இந்திய வீரர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் அதனை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இதே தன்னம்பிக்கையுடன் இனி வரும் ஐசிசி தொடர்களிலும் இந்திய அணி சாதிக்கும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களுக்கு பிறந்துள்ளது. இதனிடையே, ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவிக்க, தலைமை பயிற்சியாளராக இருந்த டிராவிட்டும் முன்பு கூறியது போல தனது பதவிக் காலத்தை டி20 உலக கோப்பைத் தொடருடன் முடித்துள்ளார்.

- Advertisement 2-

அப்படி இருக்கையில், அவர் கோலியிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றியும் கூறியுள்ளார். “3 வெள்ளை பந்து கோப்பையை கைப்பற்றி விட்டீர்கள். இன்னும் ஒரு சிவப்பு பந்து மட்டும் மீதம் உள்ளது. அதையும் செய்து முடியுங்கள்” என கூறினார். டிராவிட் கூறியது போலவே, வெள்ளை பந்தில் ஆடும் டி20 உலக கோப்பை, ஒரு நாள் உலக கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என இந்திய அணி வென்ற மூன்றிலும் இடம்பிடித்து விட்ட கோலிக்கு இன்னும் ஒரே ஒரு கோப்பை மட்டும் பாக்கி உள்ளது.

சிவப்பு பந்தில் ஆடப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதற்கு முன்பாக நடந்த இரண்டு தொடரிலும் இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. தற்போது டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி, ரோஹித், ஜடேஜா ஆகியோர் நிச்சயம் டெஸ்டில் அதிக கவனம் செலுத்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை சொந்தமாக்குவார்கள் என தெரிகிறது.

சற்று முன்