- Advertisement -
Homeவிளையாட்டுஇந்தியாவின் சாதனைகள் முறியடிக்கப்படும்... நாளை தோற்றால் கேப்டன் பதவி பறிக்கப்படுமா? - பாபர் அசாம் பேச்சு

இந்தியாவின் சாதனைகள் முறியடிக்கப்படும்… நாளை தோற்றால் கேப்டன் பதவி பறிக்கப்படுமா? – பாபர் அசாம் பேச்சு

- Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 1992 முதல் தற்போது வரை இந்தியா – பாகிஸ்தான் அணிகள் 7 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் 7 போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. இதனால் இந்திய ரசிகர்கள் பலரும் பாகிஸ்தான் அணி ரசிகர்களை இதனை வைத்தே சீண்டுவார்கள். தற்போது இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நடக்கவுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள இந்த போட்டியை நேரில் காண ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் கூடவுள்ளனர். அதேபோல் இந்த போட்டியில் வெற்றி பெறுவதை இந்திய ரசிகர்கள் கவுரவ பிரச்சனையாக பார்த்து வருகின்றனர். இதனால் நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

இந்த போட்டி பற்றி பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சொல்லும் போது, கடந்த கால போட்டிகள் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை. என் கண் முன் நடக்கும் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். சாதனைகள் படைப்பதே உடைக்கப்படுவதற்கு தான் என்று நம்புகிறேன். அதனால் இந்தியாவின் சாதனைகளும் முறியடிக்கப்படும்.

நாளை இந்திய அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராக இருக்கிறோம். எங்கள் அணியில் உள்ள அனைத்து வீரர்கள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் வீரர்களின் முழு திறமையையும் நிரூபிக்க எங்களுக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே நாளைய ஆட்டத்தை அணுகுகிறேன்.

- Advertisement-

இந்தப் போட்டியில் தோல்வியடைந்தால் எனது கேப்டன் பதவி பறிக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். அப்படி ஒரு போட்டியில் தோல்வியடைவதால் யாரின் கேப்டன் பதவியும் பறிக்கப்படாது. ஒரு போட்டியில் வெற்றிபெற்றதால் யாருக்கும் கேப்டன் பதவி வழங்கப்படாது. இதனை நான் நம்புகிறேன்.

நாளைய ஆட்டத்தில் எந்த அணி அழுத்தத்தை சிறப்பாக கையாள்கிறதோ, அந்த அணியே வெற்றிபெறும். நாங்கள் 2021 டி20 உலகக்கோப்பை வெற்றியை மனதில் வைத்து இந்திய அணி போட்டிக்கு தயாராகி வருகிறோம் என்று கூறியுள்ளார்.

சற்று முன்