- Advertisement -
Homeவிளையாட்டுபோட்டியில் நடுவே இடம்பெயர்ந்த விரல். வலியில் துடித்தாலும் ஓவரை போட்டு முடித்த பவுலர் - என்ன...

போட்டியில் நடுவே இடம்பெயர்ந்த விரல். வலியில் துடித்தாலும் ஓவரை போட்டு முடித்த பவுலர் – என்ன நடந்தது?

- Advertisement-

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருவது போன்று இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் உலகெங்கிலும் இருந்து பல்வேறு வீரர்கள் வந்து பங்கேற்று விளையாடுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடரும் ஒரு பிரபலமான தொடராகவே இருந்து வருகிறது. அதோடு இந்த தொடரில் நடைபெற்று வரும் ஒவ்வொரு போட்டியின் முடிவும் கடைசி ஓவர் வரை செல்வதால் இந்த தொடரானது விறுவிறுப்பு குறைவில்லாமல் நடைபெற்று வருகிறது.

அப்படி இந்த சீசனில் நடைபெற்று வரும் இந்த போட்டிகளில் நடக்கும் ஒரு சில சுவாரசியமான நிகழ்வுகள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற 87-ஆவது லீக் போட்டியில் எஸ்ஸெக்ஸ் மற்றும் சோமர்செட் ஆகிய அணிகள் மோதின.

அந்த போட்டியின் போது நடைபெற்ற ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வகையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்சின் போது 16-வது ஓவரை வீசிய வாண்டர் மெர்வ் பந்தினை புல்டாஸாக வீச அதனை எதிர்கொண்ட பேட்ஸ்மேன் ஸ்ட்ரைட்டாக பவுலரை நோக்கி வேகமாக திரும்ப அடித்தார்.

அதனை தடுக்க நினைத்த பந்துவீச்சாளர் வாண்டர் மெர்வ் கையை சரியாக வைக்காமல் பந்தினை அரை குறையாக பிடித்ததால் பந்து கையில் பட்டவுடனே அவர் வலியால் துடித்தார். பின்னர் அவரது விரலும் சற்று இடம் பெயர்ந்தது போன்று இருந்தது. இதனால் அவர் தொடர்ந்து பந்துவீசுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது.

- Advertisement-

ஆனாலும் வலியால் துடித்த அவருக்கு முதலுதவி செய்ய பிசியோ மைதானத்திற்குள் ஓடி வந்தார். பின்னர் சிறிது நேரம் பிசியோதெரபிஸ்ட் அவருக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக விரல் சரியாகி மீண்டும் அவர் பந்து வீசினார் இது குறித்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்