- Advertisement 3-
Homeவிளையாட்டுஇதான் வெற்றியை ருசிக்குறதா.. தனக்கு கோப்பையை கொடுத்த மண்ணிற்காக ரோஹித் செஞ்ச விஷயம்...

இதான் வெற்றியை ருசிக்குறதா.. தனக்கு கோப்பையை கொடுத்த மண்ணிற்காக ரோஹித் செஞ்ச விஷயம்…

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பையை வென்று ஒட்டுமொத்த உலகத்தையே தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியா மட்டும் இல்லாமல் உலகத்தின் பல நாடுகளில் உள்ள இந்தியர்கள் அனைவருமே இந்த வெற்றியை ஏதோ திருவிழா போலவும், தங்கள் குடும்பத்தில் நடக்கும் ஒரு விழாவை போலவும் பெரிதாக கொண்டாடி வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணி, அதே தோனி தலைமையில் 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இலங்கைக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தனர். தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையின் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற இந்திய அணி, 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக டி20 உலக கோப்பையின் அரை இறுதியிலும் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது.

இப்படி ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில் கோட்டை விட்ட இந்தியா, கடந்த ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒரு நாள் உலக கோப்பையின் இறுதி போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. உலகக் கோப்பை மோகம் நீண்ட நாட்களாக இந்திய ரசிகர்களை தூக்கமில்லாமல் வாட்டிக் கொண்டிருக்க, நவம்பர் 19 என்ற நாளையே பலரால் கடந்து வர முடியாத வண்ணம் இருந்தது.

இப்படி பல வேதனைகளில் இருந்து ரசிகர்கள் மீள வேண்டுமென்றால் டி20 உலக கோப்பையை வெல்வது தான் ஒரே வழி என்றும் அவர்கள் நம்பிக்கையில் இருந்து வந்தனர். அதனை ஒரு இடத்தில் கூட பொய்யாக்காமல் இந்தியாவுக்காக தற்போது டி20 உலக கோப்பையை வென்று அசத்தி உள்ளார் ரோஹித் ஷர்மா. கோலி, ரோஹித், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, பும்ரா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் என இந்திய அணி இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருக்கும் இந்த வெற்றிக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

- Advertisement 2-

இதனால் மட்டும் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை சொந்தமாக்கி இருந்தனர். இனி பல நாட்களுக்கு கிரிக்கெட் அரங்கில் மிக முக்கியமான ஒரு தருணமாகவும் இந்தியா கோப்பையை வென்றது இருக்கும். இதனிடையே இந்திய அணி கோப்பையை வென்ற பின்னர் ரோஹித் ஷர்மா செய்த விஷயம் ஒன்று தற்போது அதிக கவனத்தை பெற்று வருகிறது.

இந்திய அணி இறுதி பந்தில் வெற்றி பெற்றதும் ஃபீல்டிங் நின்ற ரோஹித், கீழே புல்லில் தனது கையால் ஓங்கி அடித்து அதனை வெகு ஆக்ரோஷமாக கொண்டாடி இருந்தார். அத்துடன் பிட்ச்சுக்கு நடுவே இருந்த மண்ணில் ஒரு சிறிய தூளை எடுத்து தன் வாயில் போட்டு சாப்பிட்டார் ரோஹித். இந்த ஒரு சம்பவத்தின் மூலமே எந்த அளவுக்கு உலக கோப்பையை வென்றது ரோஹித் ஷர்மாவுக்கு பெரிய தருணம் என்பதும் புரிந்து கொள்ள முடிகிறது.

சற்று முன்