- Advertisement -
Homeவிளையாட்டுMI vs SRH : கடைசி லீக் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் ரோஹித் சர்மா...

MI vs SRH : கடைசி லீக் போட்டியில் பெற்ற வெற்றிக்கு பின்னர் ரோஹித் சர்மா பேசியது என்ன? – விவரம் இதோ

- Advertisement-

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கியமான 69-ஆவது லீக் போட்டியானது இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக அந்த அணியின் துவக்க வீரர்கள் மாயங்க் அகர்வால் 83 ரன்களையும், விவ்ரந்த் சர்மா 69 ரன்களையும் குவித்து அசத்தினர்.

அதன் பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய மும்பை அணியானது 18 ஓவர்களின் முடிவிலேயே இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 201 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 47 பந்துகளை சந்தித்த கேமரூன் க்ரீன் 8 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர் என 100 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் மும்பை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் இந்த போட்டியில் விளையாட வந்தோம். அதோடு இந்த வெற்றி எங்களுக்கு தேவையான ஒன்று. அனைவருமே இந்த வெற்றியை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம்.

- Advertisement-

அந்த வகையில் இந்த போட்டியில் விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த சீசனை நாங்கள் சிறப்பாக துவங்கவில்லை என்றாலும் அடுத்ததாக மூன்று போட்டிகளை தொடர்ச்சியாக வெற்றி பெற்றோம். அதன் பிறகு நல்ல முமென்ட்டத்துடன் எங்களுக்கு தேவையான வெற்றிகள் கிடைத்தது இந்த வெற்றி எங்களுக்கு நல்ல உணர்வை தந்துள்ளது என ரோஹித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்