- Advertisement -
Homeவிளையாட்டுதோனி தலைமை பயிற்சியாளர், சச்சின் பேட்டிங் பயிற்சியாளர். உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இப்படி...

தோனி தலைமை பயிற்சியாளர், சச்சின் பேட்டிங் பயிற்சியாளர். உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியில் இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?

- Advertisement-

இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் உலகக்கோப்பை தொடரை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்தமுறை மொத்த உலகக் கோப்பை தொடரும் இந்தியாவில் நடக்க உள்ளது. அதனால் இந்த முறை இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் உலகக் கோப்பை நடந்தபோதுதான் இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியை பொறுத்தவரை கடந்த 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதுதான், கடைசியாக ஐசிசி கோப்பையை வென்றது. அதன் பிறகு 10 ஆண்டுகளாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லாமல் இந்திய ரசிகர்களை ஏமாற்றி வருகிறது.

இதனால் இந்திய அணி மீது விமர்சனங்களும், அழுத்தமும் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணி உலகக் கோப்பை போட்டியை வெல்ல முன்னாள் ஜாம்பவான் வீரர்கள் பயிற்சியாளர் குழுவில் இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு கனவை ரசிகர்கள் காண துவங்கி உள்ளனர்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக எம்எஸ் தோனி இருந்தால் அது நிச்சயமாக இந்திய அணிக்குக் அசுர பலத்தை அளிக்கும். ஏனென்றால் இந்திய அணியின் கேப்டனாக இருந்து தோனி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக்கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் அவர்தான்.

- Advertisement-

சர்வதேச போட்டிகள் மட்டும் இல்லாமல் ஐபிஎல் போட்டித் தொடரிலும் தோனி, தான் தலைமையேற்ற சிஎஸ்கே அணியை ஐந்து முறை கோப்பையை வெல்ல வைத்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ஐந்தாவது முறையாக சிஎஸ்கே அவர் தலைமையில் கோப்பையை வென்றது. இப்படி பல காரணங்களுக்காக அவர் தலைமை பயிற்சியாளராக வந்தால் இந்திய அணிக்கு அது மிகப்பெரிய பலமாக அமையும்.

அதே போல அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இந்தியன் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இருந்தால் அது ஒரு கனவு அணியாக இருக்கும். சச்சின் ஆறு முறை உலகக் கோப்பையில் விளையாடியுள்ளார். அதே போல உலகக் கோப்பையில் 6 முறை சதமடித்துள்ளார். உலகளவில் அதிக ரன்கள் அடித்த வீரராக இன்றளவும் இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் அதிக ரன்கள் அடித்த வீரராக இருந்துள்ளார் சச்சின்.

இப்படி தோனி, சச்சின் என இருவரும் இந்திய அணிக்காக மீண்டும் பணியாற்றினால் அது சிறப்பாக இருக்கும் என்பதில் ஐயமும் இல்லை. ஆனால் அதற்கான வாய்ப்பு என்பது மிக மிக குறைவு என்றே கூற வேண்டும். ஒருவேளை அப்படி நடந்தால் அதை நாம் கனவு நிஜமான தருணம் என்று தான் கூற வேண்டும்.

சற்று முன்