- Advertisement -
Homeவிளையாட்டுஎன்கிட்ட இருந்து அர்ஜுனுக்கு இது கிடைக்கும். ஆனா இனிமே அவர் இதெல்லாம் செஞ்சே ஆகணும். அப்போ...

என்கிட்ட இருந்து அர்ஜுனுக்கு இது கிடைக்கும். ஆனா இனிமே அவர் இதெல்லாம் செஞ்சே ஆகணும். அப்போ தான் வேலைக்கு ஆகும் – தனது மகன் குறித்து மனம் திறந்த சச்சின்

- Advertisement-

இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் குறித்து பேசிய சில விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டின் மீது ஃபோகஸை வைக்குமாறு அறிவுரை கூறி வருகிறேன். ஏனெனில் என்னைப் போன்றே அவருக்கும் கிரிக்கெட்டின் மீது அதிக அளவு ஈடுபாடு உள்ளது. எனவே அவருக்கு நான் சரியான சூழ்நிலையை உண்டாக்கி தர வேண்டும்.

என்னுடைய சிறுவயதில் நான் இருக்கும் போது என்னுடைய குடும்பத்தில் இருந்து எனக்கு அதிக அளவு ஆதரவு கிடைத்தது. அதன் காரணமாகவே நான் கிரிக்கெட்டில் இவ்வளவு தூரம் முன்னேறி வந்துள்ளேன். எனது அண்ணன் எனக்காக பயிற்சிகளை வழங்குவார். அதேபோன்று எனது அம்மா ஒரு எல்ஐசி ஊழியர். எனது அப்பா ஒரு ப்ரொபசர். இப்படி குடும்பத்தில் அனைவரும் சரியான வேலையில் இருக்கும் போது எனக்கு நல்ல சுதந்திரம் கொடுத்தார்கள். அதோடு மட்டுமின்றி என்னுடைய கிரிக்கெட்டை மட்டுமே நான் கவனத்தில் செலுத்த வேண்டும் என்பதால் அதற்கான ஒரு நல்ல சூழ்நிலையையும் அவர்கள் அமைத்துக் கொடுத்தார்கள்.

எனது குடும்பம் எனக்கு அமைத்துக் கொடுத்த நல்ல சூழலை போன்று நான் அர்ஜுன் டெண்டுல்கருக்கு சூழலை அமைத்துக் கொடுத்துள்ளேன். அந்த வகையில் அவர் எந்த துறையில் சென்றாலும் அவருக்கான சுதந்திரம் என்னிடம் இருந்து கிடைக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் கூறினார். மேலும் அர்ஜுன் டெண்டுல்கர் அண்மையில் ஐபிஎல் தொடரில் அறிமுகமானது குறித்தும் சச்சின் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எப்பொழுதுமே நாம் என்ன செய்கிறோமோ அதற்கான பலன் தான் நமக்கு திரும்ப கிடைக்கும்.

அந்த வகையில் நம்முடைய விளையாட்டின் மீது நாம் கவனம் செலுத்தினால் நிச்சயம் அந்த விளையாட்டு நமக்கு பெரிய அளவில் பலன்களை திருப்பித் தரும். என் தந்தை அதைப்பற்றி நிறைய கூறுவார். அதையேதான் நானும் அர்ஜுனிடம் கூறி வருகிறேன் “நீ எவற்றையெல்லாம் கிரிக்கெட்டிற்காக கொடுக்கிறாயோ, நிச்சயம் கிரிக்கெட் உனக்காக அனைத்தையும் திருப்பித் தரும்” என்று கூறுவேன்.

- Advertisement-

அதோடு நான் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற போது மீடியாவிடம் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும்தான் முன் வைத்தேன். அர்ஜுன் டெண்டுல்கரின் எதிர்காலம் குறித்து இப்பொழுது அவரிடம் எந்த கேள்விவியையும் எழுப்ப வேண்டாம். அவருக்கு எந்த துறையின் மீது விருப்பம் இருக்கிறதோ அவர் அவ்வாறே வருவார் என்று கூறியிருந்தேன். அதன்படி அவர்களும் அர்ஜுன் மீது இருந்த கவனத்தை குறைத்தனர்.

இதையும் படிக்கலாமே: விடியற்காலையில் கோலி போட்ட ஒற்றை டீவீட். பல நாடுகளுக்கு சென்றடைந்த செய்தி. ஆனால் அதிலும் தப்பு கண்டுபிடிக்கும் நெட்டிசன்ஸ்

தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மும்பை அணிக்கு அறிமுகமாகியதில் மிகவும் மகிழ்ச்சி. இனிவரும் காலத்திலும் அவர் தனது கடின உழைப்பை வெளிப்படுத்தியாக வேண்டும். சிறு வயதிலிருந்து எவ்வாறு பயிற்சி செய்து வருகிறாரோ அதேபோன்று இனியும் பயிற்சிகளை செய்து சிறப்பாக விளையாட வேண்டும் என்று அர்ஜுன் டெண்டுல்கரின் எதிர்காலம் குறித்து சச்சின் கூறியது குறிப்பிடத்தக்கது

சற்று முன்