- Advertisement -
Homeவிளையாட்டுஅஸ்வின், ஹர்பஜன் போன்ற பௌலர்களுக்கு ஐசிசி தடை விதித்திருக்கலாம். அவர்களின் பௌலிங் ஆக்ஷன், விதிக்கு முரணானது...

அஸ்வின், ஹர்பஜன் போன்ற பௌலர்களுக்கு ஐசிசி தடை விதித்திருக்கலாம். அவர்களின் பௌலிங் ஆக்ஷன், விதிக்கு முரணானது – முன்னாள் பாக் வீரர் பேச்சு

- Advertisement-

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான சையித் அஜ்மல் கடந்த 2008-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி பாகிஸ்தான் அணிக்காக 113 ஒருநாள் போட்டிகள், 35 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 64 டி20 போட்டிகள் என மூன்று வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டிற்கு பிறகு கிரிக்கெட்டில் இருந்து விலகிய அவர் தற்போது பாகிஸ்தானில் ஒரு கார்மெண்ட்ஸ் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

எப்பொழுதுமே பாகிஸ்தான் வீரர்களுக்கு மற்ற நாட்டு வீரர்களை குறை சொல்லுவதே வழக்கமாக இருக்கும் வேளையில் இவரும் தற்போது இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட உலகில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் ஐசிசி பந்துவீச்சு சோதனையில் சிக்கியிருந்தால் நிச்சயம் தோல்வியடைந்து இருப்பார்கள் என்கிற ஒரு சர்ச்சையான கருத்தை வெளிப்படுத்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக இருந்த அஜ்மல் 2014-ஆம் ஆண்டு அவரது பந்துவீச்சு முறையில் தவறு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு பந்துவீச தடை விதிக்கப்பட்டார். இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அவரது பந்துவீச்சு முறையில் சந்தேகம் இருந்ததால் அவர் மீது ஐ.சி.சி இந்த நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில் தற்போது அஜ்மல் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் : நான் பந்துவீசிய முறையானது தவறு என்றால் 20 முதல் 25 பந்து வீச்சாளர்களின் பெயரை சொல்லி அவர்களது பந்துவீச்சு முறையும் தவறு என்று என்னால் சொல்ல முடியும். அதிலும் குறிப்பாக 400-500 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் கூட இந்த பட்டியலில் உள்ளார்கள். இந்திய வீரர்களான ஹர்பஜன் சிங், அஸ்வின் மற்றும் முத்தையா முரளிதரன் போன்றோரும் கூட ஐசிசி பந்துவீச்சு தேர்வில் தோல்வியை சந்தித்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement-

மேலும் அவர்களது பந்துவீசும் முறை விதிமுறைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நான் 448 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு என் மீது ஐ.சி.சி எடுத்த நடவடிக்கை சரியானது அல்ல அதனை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. முரளிதரன் ஓய்வு பெற்ற பிறகு அனைத்து விதிமுறைகளுமே மாறிவிட்டன.

என்னுடைய மெடிக்கல் கண்டிஷன் படி நான் பந்துவீசிய சமயங்களில் என்னுடைய தோள்பட்டை, மணிக்கட்டு மற்றும் கை முழுவதும் சரியாக இல்லை. எனவே தோள்பட்டை 90 டிகிரி வரை மடங்கி இருக்கும். என்னுடைய உடம்பு ஒத்துழைக்கும் படி தான் நான் பந்துவீசினேன். அதில் எந்த ஒரு தவறும் இல்லை என்று தான் கருதுவதாக அஜ்மல் கூறினார். என்னைப்போன்றே முத்தையா முரளிதரனுக்கும் இந்த குறைபாடு இருந்ததாகவும் ஆனால் அவர் ரிட்டையர்டு ஆகும் போது ஐசிசி அந்த விதிமுறைகளை முற்றிலுமாக நீக்கியதாகவும் அஜ்மல் கூறியது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்