- Advertisement -
Homeவிளையாட்டுவெறும் 18 ரன்களை எடுத்து 2 கேட்ச்களை தவறவிட்டார் தோனி. ஆனாலும் அவருக்கு மேன் ஆப்...

வெறும் 18 ரன்களை எடுத்து 2 கேட்ச்களை தவறவிட்டார் தோனி. ஆனாலும் அவருக்கு மேன் ஆப் தி மேட்ச் கொடுத்தாங்க – கொந்தளிக்கும் பாக் வீரர்

- Advertisement-

பாகிஸ்தான் முன்னாள் வீரரான சையது அஜ்மல் 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் தோனிக்கு மேனா ஆப் தி மேட்ச் அவார்ட் கொடுத்தது குறித்து தனது அதிருப்தியை தற்போது வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் ஒரு பாட் கேஸ்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சையது அஜ்மல் தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் அஜ்மலிடம் தாங்கள் உலகின் நம்பர் ஒன் ODI பௌலராக இருந்துள்ளீர்கள். ஆனாலும் ஒரு முறை கூட 50 ஓவர் போட்டிகளில் மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் வாங்கவில்லையே என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த சையது அஜ்மல் பின்வருமாறு கூறினார்.

அது என்னுடைய துரதிஷ்டம் என்று நான் எண்ணுகிறேன். கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் நான் அற்புதமாக பந்து வீசினேன். எங்கள் அணியும் அதில் வென்றது. மூன்றாவது போட்டியில் நாங்கள் இந்திய அணியை 175 ரன்கள் சுருட்டினோம். அந்த போட்டியில் நான் ஐந்து விக்கெட்களை எடுத்தேன். பிறகு நாங்கள் பேட்டிங் செய்ய துவங்கினோம். நூறு ரன்கள் எடுத்த நிலைகள் எங்கள் கைவசம் நிறைய விக்கெட்கள் இருந்தன. ஆனாலும் அந்த போட்டியில் நாங்கள் தோற்றம்.

அந்தப் போட்டியை பொறுத்தவரை தோனி மேன் ஆப் தி மேட்ச் அவார்ட் வாங்கினார். அதில் தோனி 18 ரன்கள் எடுத்து இரண்டு கேட்ச்களை ட்ராப் செய்திருந்தார். ஆனாலும் அவருக்கு தான் மேனாபி மேட்ச் அவார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால் அது முற்றிலும் தவறு. மேன் ஆஃப் தி மேட்ச் என்றால் என்ன? ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர் தானே மேன் ஆஃப் தி மேட்ச்.

- Advertisement-

நான் அந்த போட்டியில் ஐந்து விக்கன்கள் எடுத்தேன் ஆனாலும் இந்தியா வென்றது. அதன் காரணமாக தோனிக்கு அந்த அவார்ட் கொடுக்கப்பட்டது. அதில் எனக்கு தான் மேன் ஆஃப் தி மேட்ச் அவார்ட் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றார் அஜ்மல்.

அஜ்மல் குறிப்பிடும் அந்த போட்டியானது ஜனவரி 6 2013 அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்திய அணி 175 ரன்கள் எடுத்திருந்ததாக அஜ்மல் கூறினார். ஆனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 167 ரன்கள் எடுத்திருந்தது. அஜ்மல் அந்த போட்டியில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தியது உண்மைதான். ஆனால் தோனி 18 ரன்கள் எடுக்கவில்லை. மாறாக 36 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியை பொறுத்தவரை அது தான் அந்த போட்டியின் அதிகபட்ச ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்