- Advertisement 3-
Homeவிளையாட்டு10 வருஷம் கிடைக்காத வாய்ப்பு.. இந்த தடவ வேற மாதிரி சாம்சனை பாப்பீங்க.. நம்பிக்கையுடன் பேசிய...

10 வருஷம் கிடைக்காத வாய்ப்பு.. இந்த தடவ வேற மாதிரி சாம்சனை பாப்பீங்க.. நம்பிக்கையுடன் பேசிய சஞ்சு..

- Advertisement 1-

தற்போது நடைபெற்று வரும் டி20 உலக கோப்பைத் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தங்களின் முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து நாளைய போட்டியில் ஆட உள்ளது. இதற்கான இந்திய அணியின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதே மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பாக இருக்கப்படும் நிலையில் பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள் தங்களின் கணிப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

அப்படி இருக்கையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் முதல்முறையாக சஞ்சு சாம்சன் தேர்வாகி இருந்தார். இவர் பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிவரும் நிலையில் உலககோப்பைத் தொடரில் சில முறை தேர்வாவதற்கு வாய்ப்புகள் இருந்தபோதிலும் அவரை இந்திய அணி தேர்வு செய்யாமல் போனது அதிக விமர்சனத்தை சந்தித்திருந்தது.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பையிலும், அதற்கு முன்பு நடந்த டி 20 உலக கோப்பையிலும் கூட நிச்சயம் சஞ்சு சாம்சனை எடுத்திருக்க வேண்டும் என்ற குரல்தான் அதிகமாக இருந்து வந்தது. அப்படி இருக்கையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி தற்போது இந்திய அணியிலும் இடம் பிடித்துள்ளார் சஞ்சு சாம்சன்.

இவரை சுற்றி எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் பயிற்சி ஆட்டத்தில் தொடக்க வீரராக இறங்கி ஒரு ரன் மட்டுமே எடுத்து சொதப்பி இருந்தார். ஆனாலும் லீக் போட்டிகளில் நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டையை கிளப்புவார் என்றும் தெரிகிறது.

- Advertisement 2-

இந்த நிலையில் டி20 உலக கோப்பையில் வாய்ப்பு கிடைத்தது பற்றி பேசி இருந்த சஞ்சு சாம்சன், “இந்த உலக கோப்பைக்காக இதுவரை இல்லாத சஞ்சு சாம்சனாக, அதிக அனுபவம் மற்றும் தயாரான ஒருவனாக நிற்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நிறைய நிறைய தோல்விகளை சந்தித்து குறைந்த வெற்றிகளை தான் பெற்றிருந்தேன்.

இது போன்ற ஒரு முக்கியமான தொடருக்காக ஆட வருவதற்கு முன்பாக கிரிக்கெட் மற்றும் எனது வாழ்க்கை நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்து விட்டது. இந்த முறை கேப்டனாக ஒரு அணியை ஐபிஎல் தொடரில் வழிநடத்த புகுந்தபோது எனது மனது முழுக்க அது பற்றிய எண்ணங்கள் இருந்தாலும் ஒரு ஓரத்தில் உலககோப்பை தேர்வு நடைபெறுவது என்பதும் தோன்றி கொண்டே இருந்தது.

எனது கிரிக்கெட் பயணத்திலே இந்த முறை தேர்வானது தான் நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆட வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதிலும் இருந்தது. ஆனால் அதே வேளையில் மிக கடினமான ஒன்றாக கூட இருந்தது. ஏனென்றால் இந்திய அணியின் தேர்வு என்பது அதன் காம்பினேஷன் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பொறுத்துதான் அமையும். அதற்காக எனக்கு கிடைத்த வாய்ப்பு மிக முக்கியமான ஒரு தருணம்” என சஞ்சு சாம்சன் நம்பிக்கையுடன் பேசி உள்ளார்.

சற்று முன்