ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்த போது பெரிய நட்சத்திர வீரர்கள் இல்லாமல் இருந்ததது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அந்த அணிக்கு ஷேன் வார்ன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக அந்த அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது.
ஆனால் அதன் பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மோசமான சீசன்களை விளையாடியது. ஒருமுறை கூட ப்ளே ஆஃப்க்கு தகுதி பெறாமல் புள்ளிப் பட்டியலில் பின்தங்கி இருந்தது. அணியில் எவ்வளவோ மாற்றங்கள் செய்த போதும் பெரிதாக எந்த பயனும் இல்லை.
கடைசியாக 2021 ஆம் ஆண்டு இளம் வீரரான சஞ்சு சாம்சனை அணிக்குக் கேப்டனாக நியமித்ததும் ஒரு வழியாக அணியில் மாற்றங்கள் ஏற்பட்டன. 2021 சீசனை மோசமாக முடித்தாலும் 2022-ல் இறுதிப் போட்டிக்கு சென்று ரன்னர் ஆனது. இந்த சீசனிலும் சிறப்பாக விளையாடினாலும் துரதிர்ஷ்டவசமாக ப்ளே ஆஃப்க்கு செல்ல முடியவில்லை.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் பிட்னெஸ் பயிற்சியாளரான ராஜாமணி சஞ்சு சாம்சன் பற்றி பல கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது பேச்சில் “2021 ஆம் ஆண்டு எங்களுக்கு சரியாக அமையவில்லை. அப்போது, நள்ளிரவில் ஒருநாள் நானும் சஞ்சுவும் ஐபிஎல் குறித்து பேசிக்கொண்டிருக்கையில், அடுத்த ஆண்டு நாம் டாப் அணிகளில் இருக்க வேண்டும் என சஞ்சுவிடம் கூறினேன். ஆனால் அவரோ நாம் ராஜஸ்தான் அணியை டாப் அணியாக மாற்றுவோம், அதற்காக நாம் இருவரும் சேர்ந்து உழைப்போம் என கூறினார்.
அதுமட்டும் இன்றி, ராஜஸ்தான் அணியை டாப் அணியாக மாற்ற என்னவெல்லாம் செய்த வேண்டும் என்ற ஐடியாவும் அவரிடம் இருந்தது, அப்போதே அவர் அணிக்குள் அஸ்வின், சஹால் போன்ற திறமையான வீரர்களைக் கொண்டுவரும் முடிவை எடுத்துவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவர்தான் அடுத்த எம்எஸ் தோனி” எனப் புகழ்ந்து பேசியுள்ளார் ராஜாமணி.
இதையும் படிக்கலாமே: இதோ வருகிறது புதிய ரூல்ஸ். ஐபிஎல் போன்ற டி20 லீக்களுக்கு ஐசிசி வைக்கப்போகும் புதிய செக். இதுக்கு மேல விட்டா கிரிக்கெட் நிலமை மோசமாகிடும். பிளேயர்ஸ்கு இனி கொஞ்சம் கஷ்டம் தான் போல
2010 ஆம் ஆண்டு இளம் வீரராக ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆன சஞ்சு சாம்சன், தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இப்போது ராஜஸ்தான் அணிக்குக் கேப்டன் ஆகியுள்ளார். இந்திய அணிக்காக அவர் விளையாடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே சொல்லலாம்.