ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி எங்கு நடைபெறும் என்ற ஒரு கன்ஃபியூஷன் பல நாட்களாக நீடித்து வந்தது. ஆனால் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்த ஹைபிரிட் மாடலை ஏசியன் கிரிக்கெட் கவுன்சில் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏசியன் கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பது என்னவென்றால் பாகிஸ்தான் நான்கு போட்டிகளை நடத்தும் என்றும் மீதமுள்ள ஒன்பது போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என்றும் கூறியுள்ளது.
இந்த முடிவானது உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு இது ஒரு நல்ல வரவேற்கத்தக்க முடிவு என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி இந்த ஆசிய கோப்பை குறித்த ஒரு முடிவு எட்டப்பட்டிருந்தாலும் உலகக் கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் அணி இந்தியா வந்து அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடுமா என்பது இன்னும் முடிவுக்கு வராத ஒன்றாக உள்ளது.
ஏனென்றால் ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாட முடியாது என்பதை கூறி இருந்தது. இந்த நிலையில் முன்னால் பாகிஸ்தான் வீரரான சையத் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு குறித்த தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அங்கு செல்ல ஏன் மறுக்கிறது என்பதற்கான பின்புலம் எனக்கு புரியவில்லை என்ற வகையில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.
பாகிஸ்தான் அணி எதற்காக அகமதாபாத் பிச்சில் விளையாட மறுக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அங்கு ஏதாவது பூதம் கீதம் உள்ளதா? இல்லை ஆடு என்ன நெருப்பாலான ஆடுகளமா? எதற்காக பயப்படுகிறீர்கள்? உண்மையில் இது போன்ற சவால்கள் தான் அங்கு உள்ளது என்று நீங்கள் எண்ணினால் அதற்கு தீர்வு, நீங்கள் அங்கு சென்று மகத்தான ஒரு வெற்றியை பெறுவது தான்.
இறுதியாக பாகிஸ்தான் அணி வென்றது என்பதுதான் நிலைக்கும். இதை நீங்கள் உங்களுக்கு சாதகமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒரு வேலை அந்த மைதானம் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்றால், நீங்கள் அங்கு சென்று இந்திய ரசிகர் கூட்டத்திற்கு நடுவே இந்திய அணியை வென்று நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்பதை அவர்களுக்கு உணர்த்தி விட்டு வாருங்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: சிஎஸ்கே அணியில தோனி என்ன தான் கிங்கா இருந்தாலும் அவரால TNPL-ல விளையாட முடியாது. ஏன் தெரியுமா?
இன்னும் ஐசிசி, உலகக் கோப்பை குறித்த அட்டவணையை வெளியிடவில்லை. இந்த அட்டவணையானது ஏசியா கப் முடிந்த பிறகு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அட்டவணையில் ஒரு வேலை அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா,பாக்கிஸ்தான் போட்டி இடம்பெற்றால் அது நிச்சயம் அனல் பறக்கும் ஒரு போட்டியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இரு அணிகளும் தங்களது பலத்தை காட்ட அங்கு நிச்சயம் முயலும்.