- Advertisement -
Homeவிளையாட்டுஎங்க நோக்கமே வேற.. லக்னோ இல்ல, எந்த டீமா இருந்தாலும் இதான் கதி.. ஷ்ரேயஸ் ஐயர்...

எங்க நோக்கமே வேற.. லக்னோ இல்ல, எந்த டீமா இருந்தாலும் இதான் கதி.. ஷ்ரேயஸ் ஐயர் வெளிப்படை..

- Advertisement-

கம்பீரின் கம்பேக், கொல்கத்தா அனியின் பேட்டிங் வரிசை என பல்வேறு விஷயங்கள் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாக இந்த சீசனில் பார்க்கப்பட்டு வருகிறது. வின்டேஜ் கொல்கத்தா அணியை போல நீண்ட நாட்களுக்கு பிறகு அவர்கள் ஆடி வருவதாகவும் ரசிகர்கள் குறிப்பிட்டு வரும் சூழலில் ஒவ்வொரு போட்டிகளிலும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக தான் விளங்கியும் வருகின்றனர்.

இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் ஆடி முடித்துள்ள கொல்கத்தா அணி, அதில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக ஹைதராபாத், பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளை வீழ்த்தி இருந்த கொல்கத்தா அணி நான்காவது போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்த நிலையில் தற்போது லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பயணத்தை தொடங்கியுள்ளது.

இந்த போட்டியை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்த கொல்கத்தா அணி, லக்னோவை 161 ரன்களிலே நிறுத்தி இருந்தது. கடந்த இரண்டு போட்டியிலும் லக்னோ அணி பெரிதாக ரன் குவிக்க தடுமாறி வரும் சூழலில் அதனை கொல்கத்தாவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது.

தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா, ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தாலும் தொடக்க வீரரான பிலிப் சால்ட் அசைக்க முடியாத ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பின்னர் லக்னோ அணியால் எந்த ஒரு இடத்திலும் போட்டியை கட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை. இதனால் 15.4 ஓவர்களிலேயே போட்டி முடிவடைந்ததுடன் கொல்கத்தா அணி தங்களின் நான்காவது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement-

இந்த வெற்றிக்கு பின்னர் பேசியிருந்த கொல்கத்தாவின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், “மிக பெரிதான வெற்றி. ஃபீல்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம். வெப்பம் மற்றும் பிட்ச் உலர்ந்து போயிருந்ததால் ஸ்லோ பந்துகளை வீசுவதும் முக்கியமானதாக இருந்தது. அதை அபாரமாகவும் நிகழ்த்திக் காட்டினோம்.

விக்கெட்டுகளை நாங்கள் எடுத்த போது, அட்டாக்கிங் ஆட்டத்தை அதிகமாக வெளிப்படுத்தவும் உதவி இருந்தது. இது ஒரு வேடிக்கையான டூர்ன்மெண்ட் என்ற நோக்கத்தில், போட்டியில் கவனமாக இருந்து எதிரணிக்கு விட்டுக் கொடுக்காமல், அந்த தருணத்தை சொந்தமாக்க வேண்டும் என்று தான் அணியினரை வலியுறுத்துகிறேன்” என ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

சற்று முன்