- Advertisement -
Homeவிளையாட்டுநான் அடிச்ச 3 சதமும் 3 ரகம். முன்பு எதிரணியை இப்படித் தான் விளாசி எடுத்தேன்...

நான் அடிச்ச 3 சதமும் 3 ரகம். முன்பு எதிரணியை இப்படித் தான் விளாசி எடுத்தேன் – தோற்றும் மாறுதட்டிக்கொள்ளும் கில்லின் பேட்டி

- Advertisement-

இந்த ஐபிஎல்-லை பொறுத்த வரை பல அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சுப்மன் கில். அவரின் சிறப்பான ஆட்டத்தை கண்டு பல பௌலர்களும் அவருக்கு எப்படி பந்துவீசுவது என்று தெரியாமல் தவித்தனர். அதே சமயம் அடுத்தடுத்து அவர் சதங்களை விளாசி தனது திறமையை முழுமையாக வெளிக்காட்டி வந்தார்.

இந்த நிலையில் பைனல் போட்டியில் அவரின் விக்கெட்டை சிஎஸ்கே எவ்வளவு சீக்கிரம் எடுக்கிறதோ அவ்வளவும் அந்த அணிக்கு நல்லது. ஒரு கட்டத்திற்கு மேல் விட்டால் கில்லின் ருத்ர தாண்டவம் துவங்கும் என்று பலரும் கூறி வந்தனர். தோனியும் அவருக்கு ஏற்றார் போல பீல்டிங் செட் செய்தார். அதன் விளைவாக போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே கில் அருமையான ஒரு கேட்ச் கொடுத்தார்.

ஆனால் அதை தீபக் சஹர் தவறவிட அது கில்லுக்கு சாதகமாக மாறியது. அவர் தனது அதிரடி ஆட்டத்தை துவங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 39 ரன்கள் என்ற நிலையில் இருந்தார் கில். அப்போது தோனி அவரை ஸ்டும்ப்பிங் செய்து வெளியேற்றினார். இப்படியாக பைனனில் கில்லின் கதை முடிந்தாலும், இந்த சீசன் முழுக்க சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியதால் மோஸ்ட் வால்யுபல் அஸெட் ஆஃப் தி சீசன் என்ற விருது நேற்று அவருக்கு வழங்கப்பட்டது.

அந்த விருதுக்கு பிறகு பேசிய கில், எனக்கு இந்த விருது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் போடும் உழைப்பு எல்லாம் என்னை சரியான வழியில் அழைத்து செல்கிறது. துரதிஷ்டவசமாக எங்களால் ஜெயிக்க முடியவில்லை ஆனால் போட்டியில் இது சகஜம் தான். ஆரம்பம் என்பது எப்போதும் சிறப்பாக இருக்க வேண்டும். நான் இந்த ஐபிஎல்-லை சிறப்பாக துவங்கினேன் என்றே நினைக்கிறன்.

- Advertisement-

ஆரம்பத்தில் நான் 40, 50, 60 ரன்களை அடித்தேன் ஆனால் போக போக அதை அப்படியே சதமாக மாற்ற துவங்கினேன். இந்த ஐபிஎல் சீசன் துவங்கும் முன்பு நான் கடுமையாக பயிற்சி செய்தேன். அதே சமயம் என்னுடைய டெக்நிக்கில் சில மாற்றங்கள் செய்தேன். அதெல்லாம் எனக்கு உதவியது.

இதையும் படிக்கலாமே: வெற்றிக்கு பின் ஜடேஜா போட்ட அந்த ஒரு ட்வீட். எல்லாத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்து கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்.

நான் அடித்த மூன்று சதங்களும் மூன்று ரகமாக இருந்தது. ஒரு சதம் சேசிங்கில் அடித்தேன், சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக அடித்தபோது கண்ட்ரோலாக ஆடினேன். மும்பைக்கு எதிராக அடித்தபோது ஆட்டத்தின் சூழலை அறிந்து அதற்கு ஏற்றார் போல ஆடினேன். சரியான பௌலர்களை சரியான நேரத்தில் தேர்ந்தெடுத்து ஆடினேன். எல்லா பேட்ஸ்மேன்களும் அதை தான் எதிர்பார்ப்பார்கள். மும்பைக்கு எதிராக நான் இப்படி தான் ஆடி சதம் அடித்தேன் என்று கூறியுள்ளார் கூறியுள்ளார் சுப்மன் கில்.

சற்று முன்