இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி 444 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு நேற்று பேட்டிங் செய்ய தொடங்கியது . துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நல்ல ஒரு துவக்கத்தை கொடுத்தனர்.
இருப்பினும் சுப்மன் கில் 18 ரன்கள் இருக்கும்போது, ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் அவுட் சைடு எட்ஜால் கேமரூன் கிரீனிடம் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த கேட்ச் குறித்த முடிவு மூன்றாவது நடுவரிடம் அப்போது எடுத்துச் செல்லப்பட்டது. அவர் பல ஆங்கிலில் இந்த காட்சியை பார்த்துவிட்டு இது அவுட் என தனது முடிவை தெரிவித்தார்.
நடுவர் இப்படியான ஒரு முடிவை கொடுத்திருந்தாலும் சில ஆங்கில்களில் அது அவுட் இல்லாதது போல் தோன்றுவது தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான ரசிகர்களும் முன்னால் கிரிக்கெட் வீரர்களும் இது குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அவர்களின் கருத்துக்கள் பெரும்பாலும் கில்லுக்கு ஆதரவாகவே உள்ளது.
அதேசமயம் கில்லோடு களத்தில் இருந்த ரோஹித் சர்மாவும் கூட தனது அதிருப்தியை களத்திலேயே வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்திய முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் நடுவர்களின் கண்களை விமர்சிக்கும் வகையில் ஒரு பதிவுகளை வெளியிடுள்ளார். அந்த பதில் அவர் மூன்றாவது நடுவர் தனது முடிவை எடுப்பதற்கு முன்பு கண்களை மூடி கொண்டுள்ளார் என்பது போல ஒரு படத்தை பதிந்துள்ளார்.
இந்த நிலையில் ஆட்ட முடிவிற்கு பிறகு கில் தனது இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அவுட் குறித்த தனது கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் அவர், கிரீன் கேட்ச் பிடிக்கும் போது பந்து தரையில் பட்டிருப்பதை போன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதே சமயம், ஜூம் செய்து தலையில் அடித்துக் கொள்வது போன்ற ஸ்மைலிகளை அதில் அவர் இடம்பெறச் செய்துள்ளார்.
நடுவர்களின் இந்த முடிவால் இந்திய அணி 41 ரன்கள் இருக்கும்போது தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பிறகு புஜாராவும் ரோகித் சர்மாவும் களத்தில் நின்று ஆடினார்கள். எனினும் ரோஹித் சர்மா 43 ரன்கள் இருக்கும்போது நாதன் லைன் வீசிய பந்தால் எல்பிடபிள்யூ ஆனார். அதேபோல் புஜாராவும் 27 ரன்கள் இருக்கும்போது அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ரஹானே களத்தில் சிறப்பாக ஆடினார்கள். 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 164 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.