- Advertisement 3-
Homeவிளையாட்டுமுதல்ல அதை பத்தி தெரிஞ்சுக்கோ.. அப்புறம் இந்தியாவுக்கு விளையாடு.. இளம் வீரரை சீண்டிப் பார்த்த ஸ்ரீசாந்த்..

முதல்ல அதை பத்தி தெரிஞ்சுக்கோ.. அப்புறம் இந்தியாவுக்கு விளையாடு.. இளம் வீரரை சீண்டிப் பார்த்த ஸ்ரீசாந்த்..

- Advertisement 1-

இந்தியா அணி டி20 உலக கோப்பையை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி என பல முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ஸ்வால், ருத்துராஜ் உள்ளிட்ட பலரும் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில் இதில் அதிகம் பேர் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளைஞர்கள் ஆவர்.

இன்னொரு பக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாக ஆடிவரும் ரியான் பராக், 2022 மற்றும் 23 ஆகிய ஆண்டுகளில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்த முறை மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்த அவர், எதிரணிக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கியதுடன் 500 ரன்களுக்கு மேல் சேர்த்து அசத்தி இருந்தார்.

ரியான் பராக் சிறப்பாக ஆடியதால் டி20 உலக கோப்பையில் அவருக்கு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோஹித், கோலி, ஜடேஜா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு மத்தியில் ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் தான் இளம் வீரர்கள் மத்தியில் வாய்ப்பு கிடைத்திருந்தது. ரிங்கு சிங், சுப்மன் கில் உள்ளிட்டோர் கூட ரிசர்வ்டு வீரராக தான் அறிவிக்கப்பட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவது குறித்து பேசி இருந்த ரியான் பராக், தான் இடம் பிடிக்காமல் போனதால் எந்த உலக கோப்பை போட்டிகளையும் பார்க்க வேண்டும் என்றும் விரும்பவில்லை என்றும் இறுதிப்போட்டி வந்தால் மட்டுமே அதனை பார்த்து கொள்கிறேன் என்றும் கருத்துக்களை கூறி இருந்தார்.

- Advertisement 2-

அதேபோல உலக கோப்பை விளையாட விரும்பியதாகவும், ஆனால் தான் ஆடாமல் போனதால் எதற்கு கிரிக்கெட்டை பார்க்க வேண்டும் என்றும் ரியான் கூறியிருந்தது கடும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த நிலையில், இந்திய ஜெர்சியுடன் அவர் பகிர்ந்திருந்த புகைப்படமும் அதிகம் வைரலாகி இருந்தது.

அப்படி இருக்கையில் தான் ரியான் பராக்கின் கருத்து குறித்து முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் தக்க பதிலடி கொடுத்துள்ளார். “சில இளம் வீரர்கள் தாங்கள் உலக கோப்பையில் ஆடவில்லை என்பதால் அதனை பார்க்க விருப்பம் இல்லை என கூறுகின்றனர். அவர்கள் முதலில் நாட்டுப் பற்றுள்ள ஒருவராக இருக்க வேண்டும்.

அதன் பின்னர் கிரிக்கெட் வீரராக கவனம் செலுத்தலாம். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் அணியில் இடம் பிடித்துள்ள மற்ற வீரர்களுக்கு உங்கள் இதயத்தில் இருந்து ஆதரவை தெரிவிக்க வேண்டும்” என ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

சற்று முன்