- Advertisement 3-
Homeவிளையாட்டுவேதனையில் இருந்த ரோஹித்.. ஹர்திக் கையில கேப்டன்சி போனா.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்

வேதனையில் இருந்த ரோஹித்.. ஹர்திக் கையில கேப்டன்சி போனா.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்

- Advertisement 1-

கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது ஒரு ஹாட் டாபிக்காக இருப்பது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் மீண்டும் டி 20 போட்டியில் ஆடுவதற்காக தேர்வாகியுள்ளது தான். சுமார் 14 மாதங்கள் கழித்து சர்வதேச டி 20 போட்டியில் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்க உள்ளனர்.

ஜூன் 1 ஆம் தேதியன்று ஆரம்பமாகும் டி20 உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி கடைசியாக ஆடும் டி 20 தொடரும் இதுதான். இதன் பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஐபிஎல் தொடர் பின்னர் இது முடிவடைந்ததும் டி20 உலக கோப்பை ஆரம்பமாக உள்ளது.

ஒரு பக்கம் கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் நிச்சயம் டி20 உலக கோப்பையில் ஆட வேண்டும் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இன்னொரு பக்கம் சீனியர் வீரர்களாக இருக்கும் அவர்கள் இருவரையும் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தும் படி செய்து விட்டு இளம் வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்கி டி 20 உலக கோப்பைக்கு தயார் செய்யலாம் என்ற கருத்தும் எழாமல் இல்லை.

ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் டி20 போட்டியில் ஆடுவது பற்றி பல கிரிக்கெட் பிரபலங்கள் கூட தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் இந்திய வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூட இது பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

“விராட் கோலி நிச்சயம் டி 20 உலக கோப்பையில் ஆட வேண்டும். அவர் தற்போது சிறந்த ஃபார்மில் உள்ளார். அதே போல கடந்த உலக கோப்பையில் சிறப்பாக பேட்டிங் செய்த ரோஹித்தும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக ஆடுவார் என தெரிகிறது. உலகக்கோப்பை தோல்வியால் ரோஹித்தும் மனம் உடைந்திருப்பார். அவரும் நிச்சயம் கையில் ஒரு உலக கோப்பை வாங்கி கொண்டு விடைபெற வேண்டும் என்றும் நினைக்கலாம். 2007 ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற அணியில் இருந்த ரோஹித் சர்மா, அதுபோல ஒன்றை அணிக்காக செய்ய வேண்டும் என நினைக்கிறார்.

விராட் கோலியும் நிச்சயம் டி20 உலக கோப்பையை கைப்பற்ற வேண்டும் என விரும்புவார். 14 மாதங்களுக்கு முன்பு நடந்த டி20 உலக கோப்பையிலும் அபாரமான ஃபார்மில் இருந்தார் விராட் கோலி. அவரும் ரோஹித்தும் டி20 உலக கோப்பை விளையாடத் தயாராக இருந்தால் நிச்சயம் அவர்களை அணியில் சேர்த்து தான் ஆக வேண்டும். அதே போல கேப்டன்சியை ஹர்திக் கையில் கொடுப்பது தவறில்லை. அதே வேளையில் அவருடைய பிட்னஸ்ஸையும் நீங்கள் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்