- Advertisement 3-
Homeவிளையாட்டுஅன்றும், இன்றும்.. கோலிக்கு எதிரா ரசிகர்கள் செஞ்ச காரியம்.. முதல் ஆளாக கருத்து சொல்ல வந்த...

அன்றும், இன்றும்.. கோலிக்கு எதிரா ரசிகர்கள் செஞ்ச காரியம்.. முதல் ஆளாக கருத்து சொல்ல வந்த பெரிய தலைகள்..

- Advertisement 1-

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் தான் விராட் கோலி. இவர் கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.

தொடர்ச்சியாக மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி, சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றிருந்த போதும், மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருந்ததால் விலகி இருந்தார். இதனிடையே, இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருந்தது. தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் நேரடியாக விராட் கோலி களமிறங்குவார் என்று தெரிகிறது.

ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி டி 20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வரும் ஜூன் மாதம் தொடங்கும் டி 20 உலக கோப்பையிலும் தனது ஆட்டத்தை மிகச் சிறப்பாக ஆடுவர் என்றும் தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் யாரும் எதிர்பாராத வகையிலான ஒரு கருத்து கோலியின் ரசிகர்கள் மத்தியில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பைத் தொடருக்கு பிறகு, ஐபிஎல் போட்டிகளை தவிர எந்தவொரு சர்வதேச டி 20 போட்டியிலும் கோலி ஆடாமல் இருந்து வந்தார். சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் மட்டும் தான் கோலி ஆடி இருந்தார்.

- Advertisement 2-

இதனால் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் கோலி இனி கவனம் செலுத்துவார் என்று தகவலும் வெளியானது. ஆனால் ரோஹித் மற்றும் கோலி ஆகிய இருவரும் நிச்சயம் டி20 உலக கோப்பையில் ஆடுவார்கள் என உறுதியாக ஒரு தகவலும் வெளிவந்த சமயத்தில் தான் டி20 போட்டிகளில் மெதுவாக ஆடி வருவதால் கோலி இந்தாண்டு நடைபெறவுள்ள உலக கோப்பைத் தொடரில் தேர்வாக மாட்டார் என ஒரு தகவல் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

இந்த தகவல் உண்மையாக இருக்காது என்றும் ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டு வரும் நிலையில், கோலிக்கு ஆதரவாக இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் சில கருத்துக்களை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இது கண்டிப்பாக உண்மையாக இருக்காது. ஒரு ரசிகரின் பார்வையில் பார்க்கும் போது, கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக அமெரிக்காவில் டி 20 உலக கோப்பை நடைபெற, இந்தியா பாகிஸ்தான் போட்டி என பல விஷயங்கள் இருக்கும் போது விராட் கோலி கண்டிப்பாக இடம்பெறுவார் என்பது தான் உண்மை. நான் உறுதியாக சொல்கிறேன் அவர் டி 20 உலக கோப்பையில் ஆடுவார்” என ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி 20 உலக கோப்பைக்கு முன்பாக கூட, கோலி வேண்டாம் என கபில் தேவ் விமர்சித்திருந்த போது, ஆஸ்திரேலிய அணி வீரர் கவாஜா, கோலிக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு அவர் உலக கோப்பையில் ஆட வேண்டும் என தெரிவித்திருந்தார். அதிலும் கோலி தான் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்