ஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்கு 17 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் டி20 நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் இதுவரை 26 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், மொத்தமாக 511 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
அதிலும் கடைசி 10 ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் சராசரி வெறும் 14.11ஆக மட்டுமே உள்ளது. இதனால் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு சரிபட்டு வரமாட்டார் என்று பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் அதிகரித்தன. அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டை மோசமாகவே ஆடியிருக்கிறேன் என்று சூர்யகுமார் யாதவே கூறியுள்ளார்.
இருப்பினும் ஆசியக் கோப்பைக்கான ஒருநாள் அணியில் சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து ஐதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி பேசும் போது, சூர்யகுமார் யாதவ் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கிறது. அனைவரும் சூர்யகுமார் யாதவ் ஆட்டத்தை ரசித்து வருகிறோம். ஆனால் அது டி20 கிரிக்கெட்டில் தான். அவரால் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் எதுவுமே செய்ய முடியவில்லை.
சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை தேர்வு செய்திருக்கலாம். அல்லது அந்த இடத்தில் ஒரு விரிஸ்ட் ஸ்பின்னரை தேர்வு செய்திருப்பேன். சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜீனியஸ். ஆனால் ஒருநாள் போட்டி என்பது நிச்சயம் வேற மாதிரியான கிரிக்கெட். அதனை கடைசி நேரத்தில் செய்வார் என்பதை என்னால் நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் சூர்யகுமார் யாதவ் பற்றி ரோகித் சர்மா பேசும் போது, சூர்யகுமார் யாதவிற்கு என்று பிரத்யேக திட்டம் வைத்திருக்கிறோம். அவர் டி20 கிரிக்கெட்டை போல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாட நினைக்கிறார். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வீரர் 100 பந்துகளை கூட எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும்.
ஆனால் சூர்யகுமார் யாதவை ஃபினிஷர் ரோலில் களமிறக்க திட்டமிட்டு வருகிறோம். 35 ஓவர்கள் கடந்த பின் அவரை களமிறக்கினால், 40 முதல் 55 பந்துகள் வரை அவர் எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். அதில் அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.