- Advertisement 3-
Homeவிளையாட்டுகோலிக்காக ஐபிஎல் கோப்பைய ஜெயிக்கணும்.. ஆர்சிபி அணியில் ஆடத் துடிக்கும் பிரபல வெளிநாட்டு வீரர்..

கோலிக்காக ஐபிஎல் கோப்பைய ஜெயிக்கணும்.. ஆர்சிபி அணியில் ஆடத் துடிக்கும் பிரபல வெளிநாட்டு வீரர்..

- Advertisement 1-

உலகளவில் அதிகம் ரசிகர்கள் உடைய டி 20 லீக் தொடர் என்றால் நிச்சயம் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை கைகாட்டி விடலாம். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் அதிக அளவில் மக்களை ஈர்க்க காரணம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள அதிரடி வீரர்கள் இணைந்து ஆடுவதால் தான். ஒவ்வொரு போட்டிகளுமே விறுவிறுப்பு நிறைந்து காணப்படுவதால் ரசிகர்களும் அதிக ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஐந்தாவது முறையாக வென்று அசத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம், டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் உலக கிரிக்கெட் அரங்கில் ஜொலித்த பல வெளிநாட்டு வீரர்களும் தங்களின் பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். பல கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்பது கனவாக இருக்கும் சூழலில், இந்த முறை யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்து அவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள் என்பதும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது.

இதனிடையே, இதுவரையிலான அனைத்து சீசன்களிலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி ஆடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியதே இல்லை. கோலி,, கும்ப்ளே, டிராவிட், க்றிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ், ராஸ் டெய்லர், பாப் டு பிளெஸ்ஸிஸ், மேக்ஸ்வெல் என பல அதிரடி வீரர்கள் ஆர்சிபி அணியில் ஆடி இருந்த போதும் அவர்களால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு விஷயம் அவர்களுக்கு பலவீனமாக போக, இறுதி போட்டி அல்லது பிளே ஆஃப் வரை வந்து அவர்களும் ஐபிஎல் கோப்பையை நழுவ விடுகிறார்கள்.

- Advertisement 2-

இப்படி ஒரு பிரச்சனை ஆர்சிபி அணிக்கு இருக்கும் சூழலில், அதனை இந்த முறை நிச்சயம் அவர்கள் சரி செய்து ஐபிஎல் கோப்பையை முதல் முறையாக உச்சி முகர்வார்கள் என்றும் ரசிக்கர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர் ஆர்சிபி அணி குறித்து கூறியுள்ள விஷயம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த நஜிபுல்லா ஜத்ரான், டி 20 போட்டிகளில் அதிரடியாக ஆடக் கூடியவர். இவர் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடர் பற்றி அவர் பேசுகையில், “மற்ற வீரர்களை போலவே எனக்கும் ஐபிஎல் தொடரில் ஆட வேண்டும் என்ற கனவு உள்ளது. நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சேர விரும்புகிறேன். கோலி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதே இல்லை. இந்த முறை நாங்கள் அதை சேர்ந்து மாற்ற முடியும் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

சற்று முன்