முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது அமீர் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அப்போது அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவை படுகேவலமாக கேலி செய்யும் முறையில் பேசியது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அந்த தொகுப்பாளர் ரோஹித் சர்மாவை கேலி செய்வதை கேட்டு அங்கு இருந்த பார்வையாளர்கள் கை கொட்டி சிரிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒரு பிரபலத்தின் கண்களை ஒரு துணி கொண்டு கட்டி விட்டு தொலைக்காட்சியில் மற்றொரு பிரபலத்தின் படத்தை டிஸ்பிலே செய்வர். அதன் பிறகு தொகுப்பாளர், தொலைக்காட்சியில் டிஸ்பிலே செய்யப்பட்ட பிரபலம் குறித்து சில குறிப்புகளை கொடுப்பார்.
அவர் கொடுக்கும் குறிப்பை வைத்து, கண்கள் கட்டப்பட்டிருக்கும் பிரபலம், தொலைக்காட்சியில் டிஸ்பிலே செய்யப்பட்டுள்ள பிரபலம் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இது தான் அந்த நிகழ்ச்சி. இதில் கண்கள் கட்டப்பட்டவராக முகமது அமீர் இருக்க, தொலைக்காட்சியில் ரோகித் ஷர்மாவின் படம் டிஸ்பிலே செய்யப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக,
முகமது அமீர் தொகுப்பாளரிடம், டிஸ்பிலே செய்யப்பட்டுள்ளவர், கிரிக்கெட்டரா அல்லது அரசிய வாதியா என்று கேட்க, அதற்க்கு தொகுப்பாளர் கிரிக்கெட் வீரர் தான் என்று கூறுகிறார். அதன் பிறகு முகமது அமீர், அவர் தற்போது விளையாடுகிறாரா இல்லை ரிட்டையர் ஆகிவிட்டாரா என்று கேட்க, அதற்க்கு அந்த தொகுப்பாளர், விளையாடுகிறார் ஆனால் அவர் ரிட்டையர் ஆகிவிட்டார் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார்.
அதே போன்று அடுத்தடுத்த குறிப்புகளை தொகுப்பாளர் கொடுக்கையில், நீங்கள் களத்தில் இருந்தால் அவர் களத்தை விட்டு வெளியேறுவார், நீங்கள் பந்து வீசினால் அவர் அதை அடிப்பதற்கு சான்ஸ் இருக்காது, அவருக்கு வாடா பாவ் மிகவும் பிடிக்கும் இப்படி கீழ்த்தரமான குறிப்பாக அந்த தொகுப்பாளர் கிண்டல்களை வெளிப்படுத்தி உள்ளார்.
Geo news என்ற தொலைக்காட்சி சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி உள்ளது. இதை கண்ட இந்திய ரசிகர்கள் அந்த தொகுப்பாளரின் இத்தகைய செயலை வெகுவாக கண்டித்துள்ளனர். அதே போன்று இது மிகவும் கீழ்த்தரமான செயல் என்று அவரை விமர்சித்துள்ளளனர். 31 வயதாகும் முகமது அமீர் ஏற்கனவே எல்லாவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ரிட்டையர் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.