- Advertisement -
Homeவிளையாட்டுஅப்படி பண்ணியிருந்தா எனக்கும் சான்ஸ் கெடச்சுருக்கும் போல.. இந்திய அணியை விமர்சித்த வருண்.. சர்ச்சை பதிவு..

அப்படி பண்ணியிருந்தா எனக்கும் சான்ஸ் கெடச்சுருக்கும் போல.. இந்திய அணியை விமர்சித்த வருண்.. சர்ச்சை பதிவு..

- Advertisement-

டி 20 உலகக் கோப்பை முடிந்த கையோடு இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களிலும் ஆட உள்ளது. இந்த தொடர் பற்றிய அறிவிப்பு வெளியாகி இருந்தாலும், இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பிசிசிஐ எடுத்துள்ள சில முடிவுகள் ஒரு பக்கம் ஆதரவும், இன்னொரு பக்கம் எதிர்ப்பினையும் அதிகம் சம்பாதித்துள்ளது.

சுப்மன் கில் தலைமையில் மொத்தம் 15 இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல் தொடரில் ஜொலித்த ஏராளமான வீரர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கலக்கிய நிதிஷ் ரெட்டி, அதே அணியில் தொடக்க பேட்டிங்கில் அதிரடி காட்டிய இளம்வீரர் அபிஷேக் ஷர்மா, ராஜஸ்தான் அணிக்காக பட்டையை கிளப்பிய ரியான் பராக், துருவ் ஜூரேல், டெல்லி அணிக்காக பந்துவீச்சில் அமர்க்களப்படுத்தி இருந்த கலீல் அகமது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த துஷார் தேஷ்பாண்டே, சிஎஸ்கேவின் கேப்டனாக இருந்த ருத்துராஜ் என ஐபிஎல் தொடரில் முத்திரை பதித்த பலருக்கும் இந்த முறை இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பல துடிப்பான வீரர்கள் இருந்தாலும் ஒரு சில முக்கியமான வீரர்கள் இதில் இடம் பிடிக்காமல் போனது அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக பந்துவீச்சில் கலக்கிய தமிழக வீரர் நடராஜன், கொல்கத்தா அணியில் சுழற்பந்தால் மேஜிக் செய்த மற்றொரு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி என பல வீரர்களுக்கும் இந்த டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் குமார் உள்ளிட்ட வீரர்களை விட நடராஜன், வருண் சக்கரவர்த்திக்கு இடம் கொடுத்திருந்தால் சிறந்த முடிவாக இருந்திருக்கும் என தெரிகிறது.

இதனால் எந்த அடிப்படையில் இந்த மேற்கண்ட 15 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்தது என்றும் நடராஜன், வருண் ஆகியோர் எந்த விதத்தில் குறைந்து போனார்கள் என்றும் இணையத்தில் கருத்துக்கள் பரவலாக இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் இது தொடர்பாக வருண் சக்கரவர்த்தியே தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியிட்டுள்ள கருத்து ஒன்று பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement-

இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘என்னையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக ஒரு பிஆர் ஏஜென்சி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார். அதாவது இன்று பல கிரிக்கெட் வீரர்களும் பிஆர் மூலம் தான் தங்களைப் பற்றிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பேச வைத்துக் கொண்டே இருப்பார்கள்.

இதனால், அப்படி பேசியவர்களுக்கே இந்திய அணியில் தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதையும் அவர் மறைமுகமாக சாடி உள்ளார். அதேவேளையில் இந்த பதிவை வெளியிட்ட கொஞ்ச நேரத்திலேயே வருண் நீக்க, இருந்தும் இதன் ஸ்க்ரீன் ஷாட்டை ரசிகர்கள் அதிகம் வைரலாக்கி வருகின்றனர்.

சற்று முன்