உலக கிரிக்கெட் ரசிகர்களால் உற்று நோக்கப்பட்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஒருவழியாக நிறைவுக்கு வந்துள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 209 என்ற மிக பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி உள்ளது. இந்திய அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கில், புஜாரா போன்ற வீரர்கள் இரண்டு இன்னிங்சிலும் மிக சொற்ப ரங்களில் வெளியேறினர்.
அதே வேலையில், ரகானே ஒருவர் மட்டுமே இரண்டு இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடி இருந்தார். நான்காவது நாள் இறுதியில் ரகானே மற்றும் விராட் கோலி என இருவரும் நல்ல ஒரு நிலையிலேயே இருந்தனர். ஆனால் ஐந்தாவது நாளில் துரதிஷ்ட வசமாக இருவருமே மிக எளிதாக தங்களது விக்கெட்டை இழந்தனர்.
கோலி 49 ரன்களிலும், ரகானே 46 ரன்களிலும், அவுட்சைடு தி அப் ஸ்டம்ப்ல் பிட்ச் ஆன பந்தை தேவை இல்லாமல் அடிக்க முயன்று ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து வந்த வீரர்களான ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஸ்ரீகர் பரத் போன்றோரும் பெரிதாக ரன்கள் எதுவும் சேர்க்கவில்லை.
முதல் இன்னிங்சில் ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சிறப்பாக ஆடினார். அதில் ஜடேஜா 48 ரன்களும், ஷர்துல் தாகூர் 51 ரன்களும் எடுத்தது குறிப்பிட தக்கது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா, ஷர்துல் தாகூர் ஆகிய இருவரும் பூஜ்யம் ரன்களில் வெளியேறியது குறிப்பிட தக்கது. இது தான் ஆட்டத்தின் நிலையை முற்றிலும் மாற்றியது என்று கூட சொல்லலாம்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகம்மது ஷாமி கூட இரண்டாவது இன்னிங்ஸில் 13 ரன்களை அடித்தார், ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பெரும் நம்பிக்கையாக இருந்த புஜாரா 27 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த நிலையில் இந்திய வீரர்களின் ஆட்டம் குறித்து சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
இதையும் படிக்கலாமே: நாங்க தோத்ததுக்கு காரணம் இது தான். பிட்ச் எல்லாம் நல்லதா தான் இருந்தது. எங்களோட கிரெடிட்ட எடுத்துக்க முடியாது – ரோகித் சர்மா பேச்சு
ரோகித் சர்மா, கோலி, ரகானே போன்றோர் தனிப்பட்ட மைல்கற்களை நெருங்கும்போது மோசமான ஷாட்களை ஆடுவதை என்னால் பார்க்க முடிகிறது. போட்டியில் 50 ரன்கள் அடிப்பது முக்கியம் தான் ஆனால் தனிப்பட்ட சாதனைக்காக விக்கெட்டுகளை இழக்க கூடாது என்று கூறியுள்ளார்.