சென்னை அணியின் கேப்டனான தோனிக்கு இந்த சீசனில் முழங்கால் வலி இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அனைத்து போட்டிகளிலும் 20 ஓவர்கள் கீப்பிங் செய்வது, கடைசி சில ஓவர்கள் பேட்டிங் செய்வது என தனது கடமையை அணிக்காக இதுவரை சிறப்பாகவே ஆற்றி வருகிறார்.
ஐ.பி.எல்-ல் இம்பாக்ட் பிளேயர் என்ற விதி இருந்தும் தோனி அவருக்காக அதை பயனப்டுத்துவது கிடையாது. அதே சமயம் ரோகித் சர்மா போன்ற வீரர்கள் அந்த விதியை பயன்படுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த விதியானது ஒரு வகையில் பல சீனியர் வீரர்களுக்கு தங்களது ஐ.பி.எல் பயணத்தை நீட்டிக்க வழிவகை செய்யும் ஒரு விதியாக உள்ளது.
சமீபத்தில் பிராவோ கூட, ‘இம்பாக்ட் பிளேயர்’ விதி இருக்கும் போது தோனி அவ்வளவு சீக்கிரம் தனது ஓய்வை அறிவிக்க மாட்டார். அவர் இன்னும் சில காலம் விளையாடுவார் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் இதற்க்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ளார் சேவாக். இந்த சீசனோடு தோனி ஓய்வை அறிவிப்பாரா அல்லது தொடந்து விளையாடுவாரா என்ற கேள்வி பலரது மனத்திலும் எழுந்து வரும் நிலையில், தோனி தொடர்ச்சியாக விளையாடலாம் ஆனால் அவர் இம்பாக்ட் பிளேயராக விளையாட மாட்டார் என்று கூறி உள்ளார் சேவாக்.
இது குறித்து கிரிக்பஸ்ஸிற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பது பின் வருமாறு, ஒருவர் பிட்டாக இருந்தால் தாராளமாக 40 வயதில் கூட எளிதாக கிரிக்கெட் விளையாடலாம். தோனியை பொறுத்தவரை இந்த சீசனில் அவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவர் அதிகப்படியான பேட்டிங் செய்யவில்லை. கடைசி 2 ஓவர்கள் வந்து அவர் விளையாடுகிறார். எண்ணிப்பார்த்தால் 40-50 பந்துகள் தான் அவர் விளையாடி இருப்பார்.
தோனியை பொறுத்தவரை அவர் இம்பாக்ட் பிளேயராக இருக்க வேண்டும் என்று எண்ணமாட்டார். ஏனென்றால் அவர் கேப்டன் பதவிக்காக மட்டுமே விளையாடுகிறார். ஒரு கேப்டன் கிரௌண்டில் இருப்பது அவசியம். இம்பாக்ட் பிளேயர் விதி என்பது பேட்டிங் மட்டும் ஆடலாம் அனால் பீல்டிங் செய்ய தேவை இல்லை அல்லது பௌலிங் செய்யலாம் ஆனால் பேட்டிங் செய்ய தேவை இல்லை என்போருக்கு மட்டுமே உதவும்.
ஆனால் தோனியை பொறுத்தவரை அவர் 20 ஓவர்கள் களத்தில் நிற்கவேண்டும் என்று நினைப்பவர். ஆகையால் அவர் கேப்டனாக இல்லாமல் இருந்தால் இம்பாக்ட் பிளேயராக கூட விளையாட மாட்டார். ஒருவேளை அவர் மெண்டார், கோகச் போன்ற பதிவுகளை வகிக்கலாம் என்று சேவாக் கூறி உள்ளார்.