- Advertisement -
Homeவிளையாட்டுநான் அணியில் இருந்த போது இந்தியா பாக்கிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நாங்கள் பேசிக்கொண்டது இது...

நான் அணியில் இருந்த போது இந்தியா பாக்கிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு நாங்கள் பேசிக்கொண்டது இது தான் – ரகசியம் உடைத்த சேவாக்

- Advertisement-

கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐசிசி உலகக் கோப்பை 2023க்கான அட்டவணை இன்று வெளியானது. அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் தொடங்கவிருக்கும் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. அதே சமயம் பலரும் எதிர்பார்த்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

ஒரு லட்சத்து 30 ஆயிரம் இருக்கை வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் அவ்வளவு இருக்கைகளும் நிறைந்து வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிகள் துவங்க இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் இதற்கு முன்பு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடிய உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் வீரராக இருந்த விரேந்திர சேவாக் இந்த அட்டவணை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சில கருத்துக்களை கூறி உள்ளார்.

அவர் கூறுகையில், இந்தியா பாகிஸ்தானுக்கிடையே போட்டி என்றால் எல்லோருடைய பார்வையும் அந்த போட்டியின் மீது தான் இருக்கும். அதே சமயம் இந்த முறை சமூக வலைதளங்களில் நான் சோயிப் அக்தரோடு போட தயாராக இருக்கிறேன். இதுவரை நடந்த உலகக்கோப்பை போட்டிகளை நாம் பார்த்தோமானால் ஒரு முறை கூட இந்தியா தோற்றது கிடையாது. 7-0 என்ற நிலையில் தான் நாம் உள்ளோம்.

ஏழில் ஒரே ஒரு முறை மட்டும் தான் நாம் சேஸ் செய்துள்ளோம். மற்ற போட்டிகளில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து அதிகப்படியான ரன்களை குவித்து உள்ளது. இந்த முறை இந்தியா பாகிஸ்தான் போட்டி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. எந்த அணி பிரஷரை சிறப்பாக கையாளுகிறார்களோ அவர்கள் வெல்வார்கள் என்று சேவாக் கூறியுள்ளார். அதேசமயம் தான் இந்திய அணியில் இருந்த போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதற்கு முன்பு இந்திய வீரர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதையும் விரேந்திர சேவா கூறியுள்ளார் அவர் கூறுகையில்,

- Advertisement-

நாங்கள் போட்டிக்கு முன்பு பேசிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான் எங்களுடைய நண்பர்களுக்கு எத்தனை டிக்கெட்டுகள் கொடுக்க வேண்டும் என்பதுதான் அது. அதேசமயம் சேவாக் இப்படி பேசிக் கொண்டிருக்கும்போது அங்கு பிசிசிஐ செக்ரட்டரி ஜெய்ஷாவும் உடன் இருந்தார். உடனே சேவாக் அவரிடம் காமெடியாக இந்த முறை ஜெய்ஷா எனக்கு நிறைய வேர்ல்ட் கப் பைனல் டிக்கெட்களை கொடுப்பார் என்று நம்புகிறேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.

அதேசமயம் சோசியல் மீடியா குறித்து பேசிய அவர், இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும்போது அது குறித்து நிறைய பதிவுகளை சோசியல் மீடியாவில் நாம் பார்ப்போம். அதேபோல் இந்த போட்டிக்காக நானும் ஆர்வமாக உள்ளேன். ஏனென்றால் எனக்கும் சில கன்டென்ட்கள் சோசியல் மீடியாவில் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்

சற்று முன்