- Advertisement 3-
Homeவிளையாட்டுரோஹித் வேணாம்.. ஜெய்ஸ்வால் கூட இவரு தான் தொடக்க வீரரா ஆடணும்.. வாசிம் ஜாஃபர் கொடுத்த...

ரோஹித் வேணாம்.. ஜெய்ஸ்வால் கூட இவரு தான் தொடக்க வீரரா ஆடணும்.. வாசிம் ஜாஃபர் கொடுத்த ஐடியா..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பை நெருங்கி வருவதால் இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்காவுக்கு சென்றடைந்து விட்ட நிலையில் கடந்த ஆண்டு தவறவிட்ட கோப்பையை இந்த முறை கைப்பற்ற வேண்டும் என்பதில் தான் அவர்கள் நோக்கம் உள்ளது.

மேலும் இந்த டி 20 உலக கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் தேர்வான வீரர்கள் தொடர்பான சில விமர்சனங்கள் இருந்தாலும் அதனைத் தாண்டி தற்போது இடம்பெற்றுள்ள அணிகளை கொண்டே சிறப்பாக திட்டத்தை வகுத்தால் நிச்சயம் உலக கோப்பையை எளிதாக வென்று விடலாம். ரிங்கு சிங், நடராஜன் உள்ளிட்டோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் போனாலும் சாஹல், குல்தீப் யாதவ், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா என பலர் இருப்பது நிச்சயம் இந்திய அணிக்கு நம்பிக்கையாக தான் இருக்கும்.

அது மட்டுமில்லாமல் விராட் கோலி, ரோஹித் ஷர்மாவின் அனுபவமும் சேர்ந்து பழைய தவறுகளை திருத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தற்போதைய இந்திய அணியை பாராட்டி வரும் பலரும் எப்படி ஆடும் லெவனை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து நிறைய ஐடியாக்களையும் கொடுத்து வருகின்றனர்.

அது மட்டும் இல்லாமல் டி 20 போட்டி என்பதால் எந்தெந்த வீரர்கள் எந்தெந்த வரிசையில் களமிறங்கினால் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும் என்பது பற்றியும் சிலர் கணித்து தங்களின் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர், தொடக்க வீரர்களாக யார் களமிறங்க வேண்டும் என்பது பற்றியும், அடுத்த வரிசையில் வரும் வீரர்கள் யார் என்பது குறித்தும் தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement 2-

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள கருத்தின் படி கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணிக்காக தொடக்க வீரராக ஆட வேண்டும் என்பது எனது விருப்பம். அவர்கள் கொடுக்கும் தொடக்கத்தின் அடிப்படையில் சூர்யகுமார் ரோஹித் மற்றும் சூரியகுமார் ஆகியோர் மூன்றாவது மற்றும் நான்காவது களம் இறங்க வேண்டும்.

ரோஹித் சுழற்பந்து வீச்சை எதிர்த்து சிறப்பாக ஆடுவார் என்பதால் அவர் நான்காவது வீரராக களமிறங்கியது பெரிய பிரச்சனையாக இருக்காது” என வாசிம் ஜாஃபர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள இந்திய அணியை பொறுத்தவரையில், ரோஹித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் தான் தொடக்க வீரர்களாக களமிறங்கி வருகின்றனர். ஆனால் ஐபிஎல் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கும் விராட் கோலி ரோகித்திற்கு பதிலாக தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் என்பது தான் வாசிம் ஜாஃபரின் முக்கிய கருத்தாக உள்ளது.

சற்று முன்