தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று இந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய ஸ்ரீதேவி, பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என இரு பெண் பிள்ளைகள் பிறந்தனர். இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு துபாய் நாட்டிற்கு சென்றிருந்தபோது அங்கிருந்த ஹோட்டல் அறையில் ஸ்ரீதேவி மரணமடைந்தார். இச்சம்பவம் இந்திய திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது.
ஸ்ரீதேவியின் மகள்களில் ஒருவரான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவர் முதன்முதலில் “தடக்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “கோஸ்ட் ஸ்டோரீஸ்”, “குஞ்சன் சக்சேனா’, “குட் லக் ஜெர்ரி”, “மிலி” ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் “தேவாரா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான்.
ஜான்வி கபூர் ஒரு கவர்ச்சி புயலாகவே வலம் வருகிறார். இவருக்கு இந்தியா முழுவதிலும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது, தனது வித விதமான ஆடைகளின் மூலம் ரசிகர்களின் மனதை திக்குமுக்காட செய்து வருபவர் இவர். மேலும் இளைஞர்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வருகிறார் ஜான்வி.
ஜான்வி பொது இடங்களில் தென்படும்போதெல்லாம் அங்கே பத்திரிக்கையாளர்கள் குவிந்துவிடுவது உண்டு. இந்த நிலையில் சமீபத்தில் விமான நிலையத்தில் ஜான்வி தென்பட்டார். அவரை பல ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்தனர்.
விமான நிலையத்திற்கு காரில் வந்து இறங்கிய ஜான்வி கபூரின் கையில் ஒரு தலையணையை வைத்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் ரசிகர்கள் பலரும் “தலையணையை எதற்காக கையிலேயே எடுத்துக்கொண்டு போகிறார்?” என கேள்வி எழுப்பி வருகின்றனர்.