Homeஇந்தியாஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் தற்போதைய நிலைமை என்ன?

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் தற்போதைய நிலைமை என்ன?

ஈரான் அதிபர் இப்ராஹின் ரெய்சி பயணித்த ஹெலிகாப்டர் கடும் பனிமூட்டம் காரணமாக ஈரானின் ஜல்பா பகுதியில் மலையில் மோதி விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பனிமூட்டம், மழை தொடர்வதால், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தை நெருங்கக்கூட முடியாமல் போராடி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜர்பைஜானில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது இச்சம்பவம் நடந்துள்ளது. ஹெலிகாப்டரில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரும் பயணித்துள்ளார். இருவரின் நிலை குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் உறுதி செய்தது. மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. டிரோன் உறுதி செய்த இடத்தை நோக்கி மீட்புக்குழு விரைந்துள்ளது.

சற்று முன்